சனி, 26 ஜூன், 2021

 


    சிரிப்பில் மலர்ந்தேனோ

துள்ளி எழுந்துவிட்டேன் - மலர்த்
   தோட்டத்து வண்ணமென
அள்ளி குளித்துவிட்டேன் - அருள்
    யாக்கையில் தேக்கமுற
வெள்ளிமுளைத்தவிடி - காலை
    வேளையில் தேறிவிட்டேன்
கள்ளி அவள் நிஜம்தான் - எந்தன்
    காலத்தை யீந்தவளாம்

புள்ளி மயில் விரித்தால் - அந்தப்
    பொன்னெழிற் தோகையிலே
தள்ளி கிடந்தலைகள் -  அது
     தாங்கிடும் பொய்கையிலே
பள்ளிக் கலைவகுப்பில் - அந்த
     பாலகர் புன்சிரிப்பில்
உள்ளவள் என்னிடையே - ஏனோ
     உள்ளம் அழவும்செய்வாள்

நள்ளிரவின் கருமை - பின்னர்
    நாளிற் பகலொளியை
தெள்ளமுதென் கவியை - பின்னர்
    தேக உடலிழிவை
பிள்ளையெனை அணுகி - அன்பில்
    பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
    கொள்ளவும் செய்திடுவாள்

வள்ளமதில் கடலில் - எனை
    வைத்துப் பயணமிட்டாள்
உள்ளமதில் தெளிவை -  தந்து
    ஒளிர் விளக்கமானாள்
வெள்ளமென அருள்வாள் - பின்னர்
    வேடிக்கையாய் அடிப்பாள்
பிள்ளையென் றாகிவிட்டேன் - இவள்
    பாசத்தில் ஏது செய்வேன் !

***********

kirikasan

unread,
28 Feb 2013, 12:16:34
to santhav...@googlegroups.com
இறுதி நேர தவறு கவிதையில் ஏற்பட்டுவிட்டது.. திருத்தம் இதோ



நள்ளிரவின் கருமை - பின்னர்
    நாளிற் பகலொளியை
அள்ளி யளிப்பவளோ -  கவி
   ஆற்றலும் ஈந்தபின்னே

பிள்ளையெனை அணுகி - அன்பில்
   பேச்சின்றி நுள்ளுவதாய்
கொள்ளி அனல் சுடும்போல் - வலி
   கொள்ளவும் செய்திடுவாள்

**************

kirikasan

unread,
1 Mar 2013, 20:08:28
to santhav...@googlegroups.com
 இது எனது தனிப்பட்ட கருத்து.

இலக்கியத்தில் காதலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நான் நிறைய தலைவன்,  தலைவி பேச்சுக்களாக கவிதைகள் தந்திருந்தாலும்
அவை தனித்தே  ஒதுங்கி நிற்கின்றன  அதனால் மனதில் தோன்றியதை இங்கே போட்டு உடைக்கிறேன். தவறானால் தெரிவிக்கவும்

           காதல் கவிதை

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நிறைகயலும் அலைகளையும் உருவாக்கினாள்
பார் செய்து பாரில்பல பனிமலைகளும், 
   பளிங்கெனவே உருகிநிலம் பரவச்செய்தாள்
நேர் நிற்க நில்லென்று தினகரனையும் 
   நிலவதனைச் சுழன்றோட நிகழ்வு செய்தாள்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமனிதரும்
 சேர்ந்து வாழென்றேனோ சிந்தை கொண்டாள்

யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி  வடிவுமீந்தார்
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்   
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வுசெய்து
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்

விண்ணாக்கி வெகுகதியில் கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற சக்தி தேவி
ஆணாகப் பெண்ணாக இருபாலரை
  அறிவீந்த இயற்கைதனும் உண்டாக்கியே
கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கி உணர்வீந்தவள்
மண்ணாகப் போகுமுடல் மதனாக்கிடும்
  மலர்கணையில் மனமொன்று படவும்வைத்தாள்

வானாக்கி வைத்துப் பெரு வளமோங்கிட
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில சுவையாக்கியும் 
  செய்தபின்னர் தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலம்பெருக விதி செய்தவள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை ஈர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ

இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
   இளைமையே தாய்மைக்கு ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதேவி குறைசெய்வளோ
  குற்றமவல் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாளோ

ஆதலினால் காதல்தனைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலினைப் பேசுவது  களங்கமில்லை
  கருணையுடன் நோக்குங்கள் காதல்தன்னை
பாதகமேயில்லாது பாடும் கீதம் 
  பனிமலையும் சுடுகதிரில் உருகுமாற் போல்
நாதயிசை நாட்டியங்கள் செய்தே யன்பை
  நல்லுணர்வு காதலினைப் போற்றலாமோ?

kirikasan

unread,
4 Mar 2013, 08:25:23
to santhav...@googlegroups.com

       என்றும்  வாழுவேனாம்

கொட்டும்மழை தட்டியிடி மின்னினாலும்
  கூடிவருந் தென்றல்புய லாகினாலும்
தொட்டுமழை மண்ணில்வெள்ளம் பொங்கினாலும்
  துன்பம் பந்தா யென்னை விளை யாடினாலும்
வெட்டியிரு துண்டெனவே வீசினாலும்
 வேளைகண்டு தீயைச்சூழ வைத்துயாரும்
சுட்டெனையே சாம்பலாக்கிக் கொட்டினாலும்
  சுந்தரத் தமிழி லென்றும் வாழுவேனாம்

குட்டித் தலை மொட்டையனென் றாக்கினாலும்
  கும்மாளந்தான் போட்டுக் கூத்து ஆடினாலும்
பெட்டியிலே வைத்துப் பின்னை சுற்றினாலும்
    பெண்கள் வீட்டில் நிற்கவீதி தள்ளினாலும்
தட்டிமீது வைத்துத் தோளில் தூக்கினாலும்
    தங்க வண்ணத் தீயிலிட்டு சுட்டபோதும்
பெட்டகத்துள் வைத்த கவிப் புத்தகத்திலே
     பேசுந்தமி ழாயிருந்து புன்னகைப்பனோ
  
கட்டியுடல் கங்கைநீரில் விட்டக் காலும்
   கண்ணிழந்து காணுங்காட்சி பொய்த்தபோதும்
சுட்டஉடல் வேகிப்புகை தள்ளினாலும்
   சின்னவிழி கண்டு துயர் உற்றபோதும்
வட்டமாக நின்றவர்கள் எட்டப் போயும்
   வந்தவனைக் காணவில்லை வையம் என்றும்
விட்டுப் பெரு மூச்சுடனே வீடு சென்றும்
    விந்தையென் தமிழ்க்கவியில் வந்துநிற்பேன்

சட்டிதனை ஒட்டைபோட்டுத் தந்தவன் வந்தே
   சஞ்சலத்தில் வாடும்பொருள் கேட்டபோதும்
வட்டியென்ன கொள்முதலும் நட்டம்போகும்
  வையகத்தில் பட்டதொல்லை விட்டதாயும்
முட்ட மூச்சு கட்டியுயிர் எட்டப்போயும்
   முத்தமிழின் இன்னிசையில் மெல்லக்காட்சி
இட்டுவெல்லத் தேன்தமிழில் எந்தன்பாவில்
    இன்தமிழின் சொல்லடுக்கில் வாழுவேனாம்,

******************

kirikasan

unread,
6 Mar 2013, 08:42:48
to santhav...@googlegroups.com

      இவரில்லையேல் எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற திங்கள்
   மறுநாளி லிலையாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலரும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலும்
  கதியின்றித் தொலையோடலாம்
எளியோரி னுயிரோடு விளையாடுமிவனை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமுள்ளே கொண்டு
  பிரியாயென் மகனென்னுமோ    
தெரியாத இரவோடு எழுமாழி சென்று
  திகழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீயின்
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதொன்று மில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளியில்
   தேயாமல்  நிலவோடுமோ  
அருகாமை கொடியொன்று அலைந்தாடி யின்பம்
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே யென்று
  புதிதா யோர்வழி காண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்டநாட்கள்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் ஊடே
    விளைகின்ற ஒலி பொங்குமோ
உருமாறி கருமாறி உலகத்தில்  ஏங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயத் தலைவி
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

kirikasan

unread,
8 Mar 2013, 13:11:13
to santhav...@googlegroups.com
               ஏங்கும் நெஞ்சம் !

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம் கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம் !

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ  
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு  சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றார்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலாக
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்!

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொலப்
பிள்ளை யினைத்தேரிட்டும், பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன், மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமா யிவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக்  கனிவீழ அடிப்பர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து  நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

rawmu...@gmail.com

unread,
8 Mar 2013, 14:05:03
to santhav...@googlegroups.com
வருகின்ற அசைவெலாம் வளம்சேர்க்க வேஎன்ற
      மகிழ்ச்சியை  நீ எழுதினால், 
வானாண்டு பூமிக்குள் வளம்கண்ட  மானுடம் 
      மறுபடி எழுந்து  வருமே!
தருநின்று  நிழல்தரும் தளிர்த்திடும் காய்த்திடும் 
      சலிக்காமல் கனிகள் தருமே!
தாவென்று கேட்போரைக் குழந்தையாய் எண்ணியே 
       தன்னையே தந்து விடுமே!
பருவங்கள் மாறினால் பண்புதான் மாறுமோ?
      பகலென்றும் இரவாகுமோ?     
பாலூட்டும் பசுசீறி  நஞ்சைச்சு  ரக்குமோ?
      பால்நிலா வெயில் வீசுமோ?
உருவாக்கும் மனிதனின் உள்ளத்தில் கள்ளமே 
     உண்டாகா  தென்றன் நண்பா,
ஓடிவரும் அலைமீண்டும் ஓடிவரும் உன்கையில் 
     ஒளிமுத்தம் பலவும் தருமே!
08/03/2013 புலவர் இராம மூர்த்தி.

  


 
       
 

On Fri, Mar 8, 2013 at 5:41 PM, kirikasan <kana...@gmail.com> wrote:
Boxbe  This message is eligible for Automatic Cleanup! (kana...@gmail.comAdd cleanup rule | More info
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

kirikasan

unread,
8 Mar 2013, 14:20:54
to santhav...@googlegroups.com
ஐயா  தங்கள் கவிதைக்கு நான் அடிமை. எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக