ஞாயிறு, 2 டிசம்பர், 2012



கார்த்திகை 27 

சுவிஸிலிருந்து மதிமுகன்.


சங்கரெனும் சத்தியநாதனின்
முதல் உயிர்க்கொடை வரலாறு
உலகத் தமிழர் உளம் எனும்
மலை முழைஞ்சுகளில் எங்கும் நுழைஞ்சு
பொங்கிப் பெருகும் விடுதலைப் பேராறு!

செவ்வாய், 27 நவம்பர், 2012



vOe;J thlh gUjp! 16.11.12  -MATHIMUGAN-SWISS
ty;ntl;bj;JiwatDf;F
NjhNshL Njhs; epd;w
Cu;fhty; JiwatDf;F
tPur;nrhy; fl;bg; Gfo; khiy ghLq;fs;
mtd; tPuj;ijg; GfNozpapy;
Vw;Wq;fs;!
tpLjiyg; gl;lk; Vw;wpatd;
பொங்கிடும் கடற்கரை ஒரத்தி லே 
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே 
மங்களம் தங்கிடும் நேரத்திலே 
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே 

பாசத்தில் எங்களின் தாயானான் 
கவி பாடிடும் மாபெரும் பேரானான் 
தேசத்தில் எங்கணும் நிலையானான் 
விலை தேடியே வந்திடும் தலையானான் 

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான் 
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான் 
தன்னின மானத்தை தான் மதித்தான் 
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் 

இங்கொரு தாயகம் மூச்சென்றான் 
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான் 
வந்திடும் படைகளை வீச்சென்றான் 
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் 

விடுதலைபுலிகளின் பலமானான் 
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான் 
படுகளம் மீதிலோர் புலியானான் 
பிரபாகரன் எங்களின் உயிரானான் 

என்றுமே எங்களி ன் தளபதியே 
நீ எங்களின் வானத்து வளர்மதியே 
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள் 

செவ்வாய், 20 நவம்பர், 2012


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல
Posted Image
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..

ஞாயிறு, 11 நவம்பர், 2012


மாடு -
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வண்டி இழுக்கிறது
கொம்பை மறந்த மாடு
முரண்

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

சனி, 10 நவம்பர், 2012


பூர்வீகம்

பூவல் வெட்டி
புதுத் தண்ணீர் ஊறும் போது
ஆவல் கொண்டு
அள்ளிக் குடித்த பூமி
அந்நியமாகிக் கிடக்கிறது!

சேவல் கூவும் முன்னரே
சுபஹ¥க்கு கண்விழித்து
நாவல் மரத்தடி வட்டையில்
நன்செய்யும் பூமி
வெறிச்சோடிக் கிடக்கிறது!

பாத்திருந்து பாத்திருந்து
பயிர் செய்த பூமியிலே
சோத்துக்குப் பஞ்சமில்லை
சொட்டேனும் கவலையில்லை
அப்படிதான்
அழகிய வாழ்வு அன்று!

வீரப்பழம் பறித்து
விருப்பமுடன் சுவைத்து
கோரப்பாய் இழைத்து
குடிசையிலே படுத்துறங்கிய
நேரத்தை நினைத்து
அழவேண்டி இருக்கிறது!

வரம்பினிலே பிள்ளையாய்
வடிவாக விளையாடி
வாய்க்காலில் குளித்துவிட்டு
பொழுதுபட்டால்
விளக்கினிலே படிப்போம்!

புல்லறுத்து மாடு வளர்த்த
பூர்வீகம் அந்நியமாகி
நெல்லறுத்த பூமியது
நெஞ்சுக்குள் கனவாகி
சள்ளெடுக்க இயலாமல்
தலைவர்கள் ஊமையாகி

பொண்ணாங்கன்னி பறித்து
பாலாணம் ஆக்கி
வல்லாரைச் சம்பல் செய்து
வடிவான குமுட்டி சுண்டி
வாய்க்காலில் குரட்டை வடித்து
வாயுறும் குழம்பாக்கி
உண்டு மகிழ்ந்த பூர்வீகம்
பறிபோன மாயமென்ன?

ஆடுகளும் கோழிகளும்
அதிகமாக வளர்த்து
மாடுகளை மேய்ந்து
மண்ணிலே பயிர் செய்து..
பூவலுக்குள் நீர் குடித்த
பூர்வீகம் நாம் இழந்தோம்
ஆவல் கொண்டு அதைக்கேட்க
ஆருமில்லை நாம் துடித்தோம்!

தனிமை பொறுக்கவில்லை

அன்னிய மண்ணில் உன்னை யெண்ணி
அத்தான் இருக்கின்றேன்!- தினம்
சென்னி வருந்த சிரிப்பை இழந்திச்
செய்தி தருகின்றேன்!

பேரப் பிள்ளைகள் பலன்தா னெம்மைப்
பிரித்து வைத்ததுவோ? - நெடுந்
தூர மிருந்து துடித்து வருந்தும்
துயரம் தந்ததுவோ?

அருகில் இருந்து பருகும் விருந்து
அந்தம் ஆனதடி! - உனை
இரவில் கலந்து கொள்ளும் தூக்கம்
எங்கோ போனதடி!

அறுசுவை யோடு அடிசி லிருந்தும்
அன்பே பசியில்லை! -உன்
குறுநகை தனையே காணா வாழ்வு
குறையே, “ருசி”யில்லை!

கட்டிய வீடும் காரும் சீரும்
களிப்பைத் தந்திடுமா? -நிதம்
கட்டி யணைத்து காணும் சுகந்தான்
காசால் வந்திடுமா?

உழைத்துப் பணத்தைச் சேர்த்து மென்ன
உன்னயல் நானில்லை! - உடல்
இழைத்துப் போனேன் உந்தன் நினைவு
இருப்பது தான் தொல்லை!

இங்கோர் திருமணம் முடித்திட என்றும்
இதயம் நினைக்கவில்லை! - என்
தங்கக் கட்டி நீயின்றி வாழும்
“தனிமை பொறுக்கவில்லை”!

சனி, 3 நவம்பர், 2012


கோழிமுட்டை விளம்பரம்

கோழி ஓர் முட்டையிட்டு
கொக்கரித்துப் பறக்கிறது
ஆழியில் ஓர் ஆமை
அமைதியாக மறைகிறது

திண்ணையிலே கழிக்கிறது கோழி
வேலியிலே குதிக்கிறது
மண்கிழறிச் சிரிக்கிறது
மறுபடியும் “கொக்கரக்கோ”

முட்டையிட்ட சேதியை
ஊருக்கு அறிவித்துவிட்டு
கோழி பொழுதுபட்டால்
கூட்டுக்குள் அடங்கிவிடும்

ஊர் அமைதியான பின்
உசுப்பாமல் ஓர் ஆமை
கடல்விட்டுக் கரையேறி
திடல் வந்து தோண்டி...

ஆயிரம் முட்டைகளை
அடுக்கடுக்காய் விட்டபின்னர்
அமைதியாக மூடிவிட்டு
ஆரவாரமின்றி ஆழிபோகும்.

கோழியின் ஓர் முட்டை
கொழும்புவரை தெரிகிறது
ஆமையின் ஆயிரம்
அயலவர்க்கே தெரியவில்லை.

வியாழன், 27 செப்டம்பர், 2012



ரின் எல்லைகளை

புங்கைநகர் உங்களை அன்போடு வரவேற்கிறது

by
கொஞ்சி விளையாட
கடல் அலைகள்

குருத்தோலைகளை
சிரிக்க வைப்பதற்கென்றே
பனை ஓலைகளோடு
பகிடிபண்ண
வாடைக் காற்று

அந்திமாலை வேளை
தென்னம் ஓலைகளோடு
பின்னி விளையாட
பருவக்காற்று

கோவிலை
குடை பிடிக்க
ஆலமரம்
அதன் நிழலில்
அமைதியாய் தூங்கும்
நாச்சிமார்கோவில்குளம்

சூரியன் சிரிக்கும் போதெல்லாம்
வெய்யிலோடு விளையாட
சிறுவர்கள்

மாலை நேர தூக்கத்துக்காய்
தாய்மடியோடு காத்து நிற்கும்
மாமரங்கள்

இது மட்டுமா..

வந்தோரையும்
வாழ்வோரையும்
வாழவைக்க
கல்விக்கூடங்கள்,
ஆலயங்கள்,
தேவலயங்கள்,
சனசமுகநிலையங்கள்
என எல்லாமே திறந்தே கிடக்கும்

கவிதை வேணும் என்றால்
எங்கள் கடலை எட்டி பார்த்தால்போதும்
பொங்கி வழியும் ஊர்த்தமிழ்

எங்கள் ஊர் வீட்டுத்தின்னைகள்
ஒவ்வொன்றிலும் உட்காந்து பார்த்தால்
தெரியும் விருந்தோம்பல்
என்பது தமிழரின் பண்பாடு என

இருவரியில் சொல்வதென்றால்
எங்கள் ஊராரின் மனதை படித்தவன்
எங்கள் ஊரின் அழகை கேட்டு
ரசிக்காமல் விடமாட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இயற்கையின் அத்தனை அழகையும்
பொத்திவைத்திருப்பதால்
என் கவிதையின் நாயகியானால்
பசி என்றி சொல்லி யாரையும்
அழவைக்காததால் எங்கள்
எல்லோருக்கும் அவளே தாயானால்


-யாழ்_அகத்தியன்