புதன், 20 நவம்பர், 2013

மறந்து போகுமோ

தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
Picture 004
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி!
கூழுக்குள் நீந்தியது காணும்! 

கரையேருங்கள்!
எனக்கு புரையேறுகிறது!
கவிதைக்கு அவ்வப்போது
கரவோசையும் வேணும்!.
அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன்
வணக்கம்.

திங்கள், 18 நவம்பர், 2013

இனியேனும் ஒன்றிணைவீர்?

இனியேனும் ஒன்றிணைவீர்?

கதைபேசி, இலக்கியங்கள் சலிக்கப் பேசிக்
கற்பனையாம் பொய், புளுகில், கலைகள் தம்மில்
புதைபட்டீர்; காலமெல்லாம் போக்கி விட்டீர்!
புரைபட்டீர்; சிறைப்பட்டீர்; பார்ப்பான் காலில்
உதைபட்டீர்; வதைப்பட்டீர்; அடிமைப் பட்டீர்!
ஓடோடித் துயர்ப்பட்டீர்! உருப்பட் டீரா?
சிதைபட்டீர், தமிழர்களே! இனிமே லேனும்
சேர்ந்திணைந்து செயல்பட்டே இனங்காப் பீரே!

மண்சுமந்தீர்; கல்சுமந்தீர்; வானை முட்டும்
மாளிகைகள், கோபுரங்கள், கட்டி வைத்தீர்!
விண்சுமந்த முகில்தடவும் காட்டை யெல்லாம்
வெட்டி நல்ல நகராக்கி, வெளிநா டேகிக்
கண்சுமந்த நீர்சுமந்து, கையற் றேங்கிக்
கால் நடையாய்த் துயர்சுமந்து, நெஞ்ச மெல்லாம்
புண் சுமந்தீர் தமிழர்களே! உருப்பட் டீரா?
பொறைசுமந்தே இனியேனும் இனங்காப் பீரே!


புகழ்படைத்த வரலாற்றைப் பொய்யாய்த் தள்ளிப்
புளுகுக்குப் ‘புராணங்கள்’ எனும்பே ரிட்டுத்
திகழ்கின்ற பெருமையுடன் அவற்றை யெல்லாம்
தெருத்தெருவாய்ப் போய்ச்சொல்லி, பெருமை யோடு
நிகழ்கின்ற விழாக்களிலே ஆரி யத்தை
நிலைநிறுத்தி, அதற்குக்கீழ் நீங்கள் நின்றே
இகழ்தேடும் தமிழர்களே! உருப்பட் டீரே?
இனியேனும் ஒன்றிணைந்தே இனங்காப் பீரே!

கட்டிவைத்தே கோயிலுக்குள் – கருவ றைக்குள்
கல்லைவைத்துக் கடவுளெனும் பெரும்பேர் சொல்லி
எட்டிநின்று கும்பிடென்பான்; இளித்த வாயோ
டிலைவிரித்துப் படைத்திட்டு, விழுந்து, முன்னால்
முட்டிதேய் கின்றவரை கும்பிட் டீர்கள்!
மூடர்களே, தமிழர்களே! உருப்பட் டீரா?
அட்டியிலை அவனுயர்ந்தான்! இனிமே லேனேம்
அனைவீரும் ஒருங்கிணைந்தே இனங்காப் பீரே!

உடன்பிற்ப்பை மேல்கீழென் றொதுக்கி விட்டீர்!
ஒண்டவந்த ஆரியனைத் தேவன் என்றீர்!
கடன்பெற்ற வடமொழிக்குக் காவல் செய்தீர்!
மடன்பெற்ற மூங்கையவன் குருட்டுப் பெண்ணை
மணங்கொண்டு முடமொன்றைப் பெற்ற வாறாய்,
இடமின்றி உரிமையின்றி அடிமைப் பட்டீர்!
இனியேனும் மனம் ஒன்றி இனங்காப் பீரே!
இனியேனும் ஒன்றிணைவீர்?

- -பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1973

வியாழன், 14 நவம்பர், 2013

எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல  கவி வீச்சு ,கரு ப்பொருள்,  கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன் 

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!

ஆக்கம்: அ.பகீரதன்




இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?

படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?

அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?

முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?

பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா

அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே

முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

நன்றி.
அ.பகீரதன்


வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்
 திசைமாறுமா? 1 பகுதி
(ஒரு வீர தேசத்தின் கதை)
1.  நெய்தல் நிலம் .
நீரெழுந்து முன்னலைந்து  நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம் நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக் கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை கோலமகள் ஆக்க
தேரெழுந்த தெய்வவளம் திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால் தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்துகயல் நீர்மகளின் கண்போல்

திங்கள், 29 ஏப்ரல், 2013

திண் மறம் தா !

சித்திரைத் தென்றல் பூக்கள் தேகம் தழுவ 
இல்லங்கள் கமகமவாசமாகணும் 
முத்து மணிக் கற்கள் பாக்கள் யாவும் ஒளிர 
உள்ளங்கள் யுகம் யுகம் நேசமாகணும் !

வெள்ளி, 22 மார்ச், 2013


ஏன் படைத்தான் எமை?

 

கண் படைத்தா னேன் அழுவதற்கா 

கால் படைத்தா னதைத் தொழுவதற்கா 

மண் படைத்தான் கீழ் விழுவதற்கா 

மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா 

 

விண் படைத்தான் ஒளி வருவதற்கா 

வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா 

கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே 

கடும்புயலாய் எம்மை வருத்திடவா 

 

பூக்கள் செய்தானதைப் பறித்திடவா 

பூவித ழேன்கைகள் பிரித்திடவா 

..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா 

போதை கொண்டேமலர் வருத்திடவா 

 

பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா 

பருவ உடல்தினம் வதைசெய்யவா 

தேவை என்றாலின்பம் துய்த்திடவா 

தேடியதும் அதைத் தீயிடவா 

 

நாடு என்றால்அது நரகமதா 

நரபலி தானவர் அறநெறியா 

தேடு என்றால்ஒரு திரவியமா 

தீதுசெய்தே வரும் பாவங்களா 

 

அரசன் என்றால் அவன் அறிவுளனா 

.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா 

சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா 

சேவை என்றாலுயிர் குடிப்பதுவா 

 

இனமழித்தால் அது இறைமை என்றா 

இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா 

தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா 

திருகு தாளம் சன நாயகமா 

 

உலகமென்றால் அது உழலுவதா 

உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா 

கலகமென்றால் பெருங்காவியமா 

கண்களில் நீரிடல் அரசாங்கமா 

 

வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான் 

வேடிக்கை பார்ப்பது விரிஉலகா 

கட்டுகிறான் கடல் வீசுகிறான் 

கையறு நிலைகொண்ட கவினுலகா 

 

எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம் 

எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம் 

நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல 

நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம் 

 

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க 

புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க 

தீக்களை வைத்தனர் தெருமுழுக்க 

தீய்ந்தது ஈழம் தேம்பியழ 

 

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்

ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல 

பெருகி யதோ பேரவலமல்ல 

பேய்களின் பிடியின் ஆழங்களே 

 

இறந்தது ஈழ தமிழனல்ல 

இயற்கையின் தர்மதிருவுளமே 

எரிந்தது தீயில் ஊர்களல்ல 

இறையவன் கோவில் வாசல்களே

 

கவிஞர் கிரி காசன்

ஏன் படைத்தான் எமை?


கண் படைத்தா னேன் அழுவதற்கா 

கால் படைத்தா னதைத் தொழுவதற்கா

மண் படைத்தான் கீழ் விழுவதற்கா

மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா



விண் படைத்தான் ஒளி வருவதற்கா

வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா

கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே

கடும்புயலாய் எம்மை வருத்திடவா



பூக்கள் செய்தானதைப் பறித்திடவா

பூவித ழேன்கைகள் பிரித்திடவா

..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா

போதை கொண்டேமலர் வருத்திடவா



பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா

பருவ உடல்தினம் வதைசெய்யவா

தேவை என்றாலின்பம் துய்த்திடவா

தேடியதும் அதைத் தீயிடவா



நாடு என்றால்அது நரகமதா

நரபலி தானவர் அறநெறியா

தேடு என்றால்ஒரு திரவியமா

தீதுசெய்தே வரும் பாவங்களா



அரசன் என்றால் அவன் அறிவுளனா

.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா

சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா

சேவை என்றாலுயிர் குடிப்பதுவா



இனமழித்தால் அது இறைமை என்றா

இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா

தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா

திருகு தாளம் சன நாயகமா



உலகமென்றால் அது உழலுவதா

உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா

கலகமென்றால் பெருங்காவியமா

கண்களில் நீரிடல் அரசாங்கமா



வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான்

வேடிக்கை பார்ப்பது விரிஉலகா

கட்டுகிறான் கடல் வீசுகிறான்

கையறு நிலைகொண்ட கவினுலகா



எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்

எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்

நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல

நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம்



பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க

புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க

தீக்களை வைத்தனர் தெருமுழுக்க

தீய்ந்தது ஈழம் தேம்பியழ



ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்

ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல

பெருகி யதோ பேரவலமல்ல

பேய்களின் பிடியின் ஆழங்களே



இறந்தது ஈழ தமிழனல்ல

இயற்கையின் தர்மதிருவுளமே

எரிந்தது தீயில் ஊர்களல்ல

இறையவன் கோவில் வாசல்களே



கவிஞர் கிரி காசன்

வெள்ளி, 8 மார்ச், 2013


சுதந்திர தினமா? அடிமை இனமா?


தமிழ்க்குடிகள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

எங்கள் கலைப்பொக்கிஷம் காலவதியாகிப் போனதுவோ?

ஊருக்குள் ஒரு நல்லதுரை
அவர்தான் எங்கள் இராஜதுரை
பல்துறையில் கண்டார் ஒருகரை
பெண் எனும் பெருஞ்செல்வம்

சத்திரத்தில் சாமியார்
சமையலறையில் மாமியார்
உலகில் உன்னைவிட பாவியார்
உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்

வேலையிலே எஜமான்
மாலையிலே உன்மான்(Man)
இப்படியே நீஏனம்மா அலைவான்
சபித்துவிடு இருவரும் தொலைவான்

இலக்கியத்தில் மட்டும்உனை பூவாய்
இல்லத்தில் எப்போதும்நீ நாராய்
மொத்தத்தில் நீபாலைவன தேராய்
எழுந்துவாம்மா ஆணுக்கு நிகராய்

நாட்டின் பெருஞ்செல்வம் நீயம்மா
நாவிழந்து நிற்பதுஉனக்கு தகுமா
நமக்கெல்லாம் நீதானே தாயம்மா
கூனிக்குறுகுவது நீஏனம்மா

விண்வெளியில் கால்பதித்தாய்
வீரமண்ணில் களம்பதித்தாய்
இன்னுமென்ன உறக்கமம்மா
கற்றுயர்ந்து ஆணையிடு ஆணையும் மிஞ்சிவிடு

நன்றி,
அ.பகீரதன்
http://pageerathan.blogspot.ca/

வியாழன், 31 ஜனவரி, 2013

அ.பகீரதன் கவிதைகள்


அதிசயத் தலைவன் எங்கள் பிரபாகரன்


தங்கத்தால் உடல் அமைஞ்சு

தாமரையால் மனசு செஞ்சு

தமிழ்த்தாயின் குருதி பாய்ச்சி

தமிழருக்காய் ஓர் வரவு

 

அடிமை வலி பொறுத்திருந்த

அருமைத்தாய் பார்வதியோ

இடுப்பு வலி பொறுக்காமல்

ஈன்றெடுத்தாள் ஒரு சேகுவரா

 

முதலிரவு கூடுகையில்-ஆத்தா

முருகனின் சித்திரத்தை நினைத்தாளோ?

முழுகாமல் இருக்கையிலே-ஆத்தா

மூவேந்தர் சரித்திரத்தை படித்தாளோ?

 

தொப்புள் கொடி யறுத்து-தாதி

தமிழ்க் கொடியை இணைத்தாளோ?

தலைகீழாய் பிடிக்கையிலே-தாதி

தமிழ்க் கீதம் இசைத்தாளோ?

 

ஆயுதமின்றி இருந்ததன் விளைவே

ஆயிரம் இழப்பென உணர்ந்தான்

கைமோதிரம் விற்று காசினைப் பெற்று

கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றான்

 

பட்டினியால் பச்சை மரவள்ளி உண்டான்-போர்

வித்தைகள் கற்று விஷக்கிருமிகள் கொன்றான்

எத்துணையுமின்றி அத்தனை பாடும் பட்டான்

தம்பியாய் இறங்கி அண்ணனாய் உயர்ந்தான்

 

சீலனாய் மில்லராய் திலீபனாய் சூசையாய்

சங்கராய் மாலதியாய் புதுவையாய்

அத்தனை துறையிலும் மிளிர்ந்தான்

ஆடுகளத்தில் தானும் புலியாய் நின்றான்

 

துரோகங்கள் துயரங்கள் தோல்விகள்

இடராக தொடராக வந்தும்

தியாகங்கள் மாயங்கள் வியூகங்கள்

வகுத்து தமிழ் மானத்தைக் காத்தான்

 

முடிவில்லாப் போரை முடிக்க முனைந்து

முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்தான்

மூவேழு நாட்டினை ஒன்றாக எதிர்த்து

முப்படையின் துணையோடு தனியாக நின்றான்

 

காவியர் நாடும் காந்தீய நாடும்

காவியத் தலைவனை வஞ்சகமாய் வீழ்த்த  

தன்னுடன் தந்தையும் தனயனுமாய்-மூன்று

தலைமுறையோடு களத்தில் நின்றான்

 

களத்தில் வீழ்ந்து புலத்தில் எழுந்தான்

காலத்திற்கு ஏற்ப புதுக்களத்தை வரைந்தான்

ஈழத்தின் தேவையை உலகத்தில் ஆழமாய் பதித்தான்

உலகத் தமிழரின் தலைவனாய் வரலாறு படைத்தான்

செவ்வாய், 22 ஜனவரி, 2013


கவிதை துளிகள் -ஆக்கம் சசி நவரத்தினம் புங்குடுதீவு 4./லண்டன் 
____________________________________________________________________
தினமும் கனவிற்காக 
கண்மூடிய நான் 
இப்போதெல்லாம் நாட்களை 
நகர்த்துவதற்காக
கண்மூடுகிறேன்
கானல் நீராய் கண்ணீர்க்குவளையாய்
கனவுகள் நிறைந்த வாழ்க்கை
துடுப்பிருந்தும் கரை ஒதுங்க முடியா
துர்ப்பாக்கிய  நிலை உறவுகளை பிரிந்து வாழ்வது
----------------------------------------------------------------

அன்று ராமனை பிரிந்த சீதை
அசோகவனத்தில்
உன்னை பிரிந்து நான்
இன்று அதே
சோகவனத்தில்....
........................................................................¨
உன்னிடம் மனம்
தொலைத்த கணம் முதல்
காதல் அழகாய் தெரிந்தது....

உன் வரவு பார்த்து
விழிகள் பூத்து
கண்ணீர் காய்ந்த
வேளைகள் கூட
அழகானதாய் .....

இள மனதின் ஏக்கங்கள்
புரியாமலேயே உன்
விழிகள் என்னைச் சுற்றி
வந்த வேளைகள் கூட
அழகாய் ......

உனக்கு என் காதலில்
வலியை புரிய வைக்க
எத்தனித்த வேளைகள்
வலி கூட்டினாலும்...
...
உன்னை விரும்பியதாலே...
உனக்காய் என்று
உருக்கிய நிமிடங்கள்
எல்லாம்
என் வாழ்வில்
மிக மிக அழகாக
மெருகேறியது உன்னை
மனம் விரும்பியதால்...
இன்று களையிழந்து
நின்றாலும்...
இந்த இதயம் எனக்கு மட்டும்,
இன்னும் அழகாய்
தென்படுகிறது
நீ அதில் இன்னும் வாழ்வதால்.....

search on www.nilaamuttam.blogspot.com

சனி, 19 ஜனவரி, 2013

இன்று --பிரியந்தி

இணையக்கவியரங்கம்

இன்று --பிரியந்தி

இவள் சொற்களில் தானாக வந்து
சிக்கிகொள்கிறது தமிழ்

வானவில்லின் வர்ணகலப்பாய்
ஒளிரும் கவிதையில்
உள்ளத்தை ஊடுருவும் சொற்களை
ஒளித்துவைக்கிற ரசவாதம்.

சமுக போலித்தனங்கள்மீது கூராய்
இறங்கும் சொற்கள்
அறிவொளியை கொழுத்துகிறது------

அறிவு யுகத்தின் முதல்குரலாய்------வாருங்கள் பிரியந்தி---

யார்க்கெடுத்துரைப்போம்

நினைவடர்ந்த பாதைகளின்
யாத்திரிகர் நாம்

எம் வெற்றுக் குவளைகளில்
கசந்த நினைவுகளின் ஒரு துளி
மிச்சமிருக்கின்றது எப்போதும்
எமது ஈமப் புன்னகையைச் சுமந்த படியே
அலைகிறது காற்று

இன்றும்
தீயாலானொரு ஆடை புனைந்தே
தெருவிலிறங்கும் நிர்ப்பந்தம் எமக்கு

கடந்து செல்லும் வாயிலிருந்து
காமம் இறங்கி வருகின்றது
நூல் பிடித்திறங்கும் மயிர்கொட்டியாய்

வழிநெடுக
தெரு நாய்க் கலவியாய்
எப்போதுமொன்று பின் தொடர்கின்றது
புணர்ச்சிக் கனவில் மிதந்தபடி

ஸ்பரிசத்தின் அத்தனை இதங்களின் மீதும்
தீ வாரி இறைக்கின்றது
பிறிதொன்றின் தீண்டல்

தெறித்தறுந்த இழையின் வழி
இறுதி இசையும் கசிந்து விட
மௌனித்திருக்கிறது யாழ்

மறுபடி மறுபடி
அறைகிறது இருள்

அழக்கூடத் திராணியற்ற யாழ்
பாழ்

இப்போதெல்லாம் நாம் புன்னகைப்பதில்லை
அல்லது
புன்னகைக்கான எந்த அவசியமும் இருப்பதில்லை

பிரளயம் காவுகொள்ளும் முன்னிருந்த
காலம்மீளும் எமதவாவை
யார்க்கெடுத்துரைப்போம்