புதன், 16 நவம்பர், 2016

மாவீரர் எழுந்தமானக் கவிதை ப் போட்டியில் நான் சமர்பித்த கவிதை .உடனடியாக எனக்கு தரப்பட தலைப்பு இது தூ ரத்தே இருந்தாலும் மேய்ப்பன் குரல் கேடடால் ...(சிவ-சந்திரபாலன் .பேர்ண்)
......................................................................................................................
1.போவீரா போர்க்களத்தில் போய் நின்று எதிரிதனை
               பொருதுவீரா பின்னே பெருவெற்றியதனை
தாவீரா தமிழ்த்தாயி ன் துயர் துடைத்து தலைவன் வழி
             தமிழீழம் மீட்டுத் தாவெனவே .. நீவிர்
சாவீரா சாக்களத்தில் சரித்திரமாய் ஆவீரா ஆனாலும்
              சந்ததிகள் தழைக்கவென சோதரர்கள் பிழைக்கவென
மாவீரா உன்னை வணங்கி மானசீகமாய் ஏற்று உன் ஆசி
                 மலர்க்கவிதை நான் தொடுக்கத்தான் .
2.கல்வெட்டில் பதித்திட்ட கரிகாலன் கரந்தடிப்படை
              காவிய த்தை தந்த காவல் தெய்வங்கள்
வல்வெட்டித்துறை தந்த வரலாற்று நாயகனை
             வாழ்த்தி வணங்கி வரைகின்றேன் வருங்கவியை
சொல்கட்டிபாடவந்தேன் செந்தமிழில் தேட வந்தேன்
              சேர்த்திடுக என் கவியை அதுவும் சேதி சொல்லும்
நல்மெட்டி ல் நான் பாட நல்ல வரம் தான் நாடும்
              நல்ல சபையோரே நல்கிடுவேன் நன்றி
3.தும்பிவரும் துவக்கும் வரும் தூரத்தே இருந்து
           தோட் டாக்கள் எகிறிவரும் என்றிருந்த எம்மை
எம்பி தாறன் ஏழ் மாவடட சபையும் தாறன் கூடவே
                 எலும்புத் துண்டும் போடும் அரசு அப்போதே
தம்பியவன் தானெழுந்தான் தரணி யெ ங்கும்தான் மிளிர்ந்தான்
               தமிழீழம் படைத்திடவே எம்மிடையே எம்மை
நம்பியிரு நாளை தமிழீழம் வரும் நாள் கிட்டும்
                நாலு படை சேர் நல்ல வழி பார் என்றான்
4.கிடுகுவேலி பின்னே கிணற்றடி விடுப்ப்பார்த்தவள்
        கிரானைட் குண்டெறிய கிளர்த்தெழுந்தான் எதிரி
பொடுகுப்பேன் பொறுக்கி பெருமுற்றம் தான் பெருக்கிய
     பீரங்கி தானெடுத்து பெரும்குண்டை பாய்ச்சலானாள்
கடுகு வெந்தய ம் கருக்கி கறிவைத்தி றக்கியவள்
        கரும்புலியாகி கருகி கண்ணெதிரே வெற்றிதந்தாள்
விடுக இம்மண்ணை என்று வீர நடை போட்டு வந்தாள்
          வீரமங்கை வழி செல்ல மேய்ப்பன் அழைக்கின்றான்
ஐந்து நட்சத்திரமும் ஐம்பத்திரண்டு நட்சத்திரமுமாய்
           அயல் வீட்டு அறுந்த காவி படையும் கூட
சந்தர்ப்பம் பார்த்து சடுதியில் யூதாசுடனே
          சனி புரூட்டசுமாக புகுந்து விளையாடிடவே
கந்தகத்தீ கருக்கி மண்ணை எரித்த காட்சி
             காரியத்தை முடித்து வைக்க மௌனித்த வேள்வி
நொந்து போய் இருந்திலோ ம் நொடிப்பொழுதில் முடிவெடு
              நேரத்தில் மேய்ப்பன் குரல் மெல்லென நீயெழு
கொத்துக்கொ த்தாக கொத்துக்குண்டுமழை வீச
              கொடுங்கோலன் கோத்தபாயா கோரத்தாண்டவமாட
பொத்துப் பொத்தென்று நாம் பெத்து போட்ட செல்வங்கள்
         பெருவெளியில் பேரிருளில் பெரும் சதையாய்
செத்து செத்து வீழ்ந்த கதை சொல்ல முடியா வேளை
           செல்வோமா செய்வோமா சேதிஎன்னவென்று நீ
பத்து முறை யோசித்து பார்வையாளனாய் அன்றி
          பார் மேய்ப்பன் குரல் கேட்கும் பக்கமே சேர்
தாய் நிலத்தை காதல் செய் தரணியெங்கும் மோதல் செய்
             மீண்டுமெழ தாயகத்தில் நாம் வாழ
நோய் நலத்தில் வீழ்ந்தால் நொந்து சாதல் உண்டே
                நோக்கமது காக்க நொந்து சாதல் நன்றே
பாயநிலத்தில் படுத்து பைந்தமிழ்ச்செவிமடுத்து
              பார்க்கவொரு மார்க்கமுண்டு கேளாய்
சேய் நலத்தை பேணும் தாயாய் நாம் இங்கிருந்து
           
செல்ல மேய்ப்பன் குரல் கேட்கும் காத்திரு

புதன், 2 நவம்பர், 2016

மாவீர்நாள்
விழிகள் நனைந்து
ஒயாதலைகள் ஓடும்…
விழிப்போடு இருக்கும்
நினைவுகள் கனத்து
ஆனையிறவு விரியும்!

மலரோடு பிறந்து
இமயமலையோடு மேதிய
வித்தைகள் வியக்கும்!

பாயும் கத்திபோல் வந்து
வார்த்தைகள் விழும்
சரித்திரம் திரும்பும்
வரலாறு பேசும்போது!

அடிமைச் சங்கிலி
உடைக்கப்படுமா?
காணியும் கலைகளும்
திரும்பப் கிடைக்குமா?

உன்மேல் போர்த்தபட்டிருக்கும்
சிறைகளும் இம்சைகளும்
விட்டு விடுதலையாகுமா?

இல்லை மேலும் சிங்களம்
நஞ்சினை உண்டவர் செஞ்சின
விழியர் கண்டு! நடுங்கும்
பயத்தில் நாணம் மதியின்
தெளிவிழந்த பாவத்தில்
மோசமாய் காரிருள் சூழுமா?

மீண்டும் நீண்டு தொல்குடி உன்னை
இனக்கலவர நெருப்பு எரிக்குமா?
உன் ரணகள் வடுக்கள் நூராது
தோண்டி நாறுமா? இதைக் காணும்முன்
புஜவலிமை புயலாய் பாரெங்கும்
சுழன்றெழ நீட்டியகை ஆணைகேட்கும்!

இன்றாறாவது மகாவம்ச மகாநாடுகளில்
ஆயுதங்களோடு பேசும் பேச்சில்
ஆயுளை நீடிக்கப் பேசியதுண்டா?
முள்ளிவாய்க்கால் இனக்கொலை
குருதி குமுறி குளித்த பின்பாவது
வலிதீரும் வழி ஒருதுளி உண்டா?

அச்சுப் பிழையான இனவெறியாடுவர்
வெளிச்சத்தை நூலால் மறைக்கப்
பார்க்கிறது! நலியாது நலிந்துபோகாது
தொட்டால் நெருப்பு பாய்ந்தால் புலி
கோட்டையாய் பாசறை விரிகிறது
பெரியபடையின் சேட்டைகள் அடக்கி
வேலி போடவே புலிகள் பாய்கிறது!

எல்லை பிரிந்து தமிழீழத்தை
புலிகள் ஆளும்காலம் ஒடிவருகிறது
உன்னைக் கண்டு அடங்கிட
உன்னைக் காட்டும் நாள்!
பிறந்தநாள் இன்று, நாளை மாவீர் நாள்
முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை
திசைமாறி நடந்திருந்தால்
புனித அரியணையில்
தமிழ்த்தாய் வீற்றிருப்பாள்

மானிட ஒழுக்கத்தின்
அச்சுப் பிழைகளான
மகாவம்ச சீடர்களோடு
பக்கதேசப் படைக்கலன்கள்
இணையாதிருந்தால்
புலிகள் ராஜாங்கம்
மனிதனோடு கைகோர்த்து
இணைந்து வந்திருக்கும்

ஆனால் இங்கு
கல்லறைகளே
கல்லறைகளாகிவிட்டதால்
சடலங்களை விழுங்கும்
விலங்குகளால்
கல்லறைப் பிணங்களும்
மதம் எனும் பூதத்தால்
விழுங்கப்பட்டது அனாச்சாரம்

தொல்குடி மக்களின்
செதுக்கப்பட்ட நாகரிகத்தின்
சின்னங்கள் தூபிகள் சிலைகள்
ஆலயங்கள் கல்லறைகள்
வழிபடத் தெரியாத வழிபாடு
சிங்களக் கீழ்னிலை கண்டு

அஞ்சுமா புலிப்படை அடங்குமா சினம்
புதியபுதிய அலைகள்வந்து புரளும்
புதிய புறனாநூற்றை படைக்கும்
தமிழீத்தை புலியாட்சி செய்யும்
பூமிபிளந்து விதைகள் விழுந்து

விழவிழ எழுந்து வீரம்காப்போம்
சடலமானவர் மயானம் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
செத்தவர் சமாதிகள் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
காலமானவர் சவக்காலை அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்

சாவுவீடு பாடும் ஒப்பாரியும் அல்ல
போர்குணம் நின்று எழும் ஆணை
புனிதர்கள் எழுந்தருளும் ஆலயம்
கவிதையில் கதையில் கல்லில்
தறுதலைகள்
தலையணையாய்
ஊரிலே காணியில்லை
உறவுமற்றொருவரில்லை!

பெயரில் வடக்கும் கிழக்கும்
முதலமைச்சர் நிதி நீதியில்லை
விக்னேஸ்வரன் ஐயா தமிழன்
ஒடுங்கும் குரலின்றி
ஒங்கியகுரல்
காலம் கை  நழுவிவிட்டது!

காலத் தலைவனும் கண் எதிரில் இல்லை?

அகத்தில் பதறல் புதையுண்டவர்
காரிருள் நின்று கதறுகின்றார்
எரிமலை ந‌டுவில் இமயம்!
உறைவாள் உடைந்தாலும்
உள்ளமுடையாத் தமிழ்மாறன்
நாட்டிவைத்த நாட்டாமைப் புலி
தேர்தல் மேடையில் மத்தளமாய்!
நடமாடும் மாங்காய் வடிவத்துள்!

அனுராத புரத்தில் இனவெறியன்வெடி
அராலியில் சுயரூபம் கிழி அடி
எத்தனைகால கபட நாடகனொடி?
எத்தனைகாலஒப்பந்தம் கிழி இடி?

எத்தனைகால பொய் முகதரிசனம்?
பிலாக்காய் திண்ணியின் வெடியில்
பனங்கொட்டை சூப்பி கிளர்ந்தெழாது
முப்பது ஆசனத்திற்கு அழுகிறான்!

இம்சை எல்லாம் தூசி என்கிறான்!!
உணர்வுக் கத்தியச் சுழற்றாது
இனமானத்தை கொன்று புலிச்சாயல்
கூவி ஆசனம் பொறுக்க அழைப்பு

தமிழன் தோலுரித்து செருப்புத்
தைப்பேன் அவன் துட்டகைமுனு
ஓப்பந்தங்கள் கிழிக்கப்பட்டது? சீய்!
நீள்யோசி! சீறு! வீறுகொள! நில்!
நிமிர்ந்து! வாக்குக்கேள் வாக்குக்கொடு
பகைவன் கையைப் பலப்படுத்தாதே!
காலாகாலங்கள் நீதிமடிந்த அடிமை!

கைகொடுத்து தோள் கொடுப்பாரற்றாய்
கை ந‌ழுவி தோள் சறுக்கிவிட நின்றாய்
கைகூடும் தருணம் வாய் மூடக் கண்டாய்
கை தூக்கி முள்ளிவாய்க்கால் மிச்சத்
துகிலுரிந்த துன்சதனர்கள் தேர்தலில்
முள்ளிவாய்க்கால் கொடூரம் உச்சம்!

எத்தனாய் கை கழுவிய பிலாத்துக்களாய்!
புலம்பெயர் தமிழனை கூப்பிடுகிறான்!
திடீரெனப் பெய்தமழை இந்திரன்கள்
வார்த்தைகள் வழிகளை ந‌ம்பாதீர்கள்!

தமிழா புலம்பெயர் தமிழா!! தமிழினமே!
வாடும் சமுகம் வதைபடும் உரிமைகள்
உன்னைத் தேடும் கணிப்பை ஒருகணம்
உனக்குள் சிந்தித்து விடையளிப்பாய்:!

இப்போதும் நீசிந்தும் ஒரு விழி நீர்த்துளி
முள்ளி வாய்காலுக்காய் சிந்தும் மணித்துளி
புலம் பெயர்ந்தவன் ஒளிந்து கொண்டிருக்கவில்லை
முள்ளிவாய்கால் கண்மணிகளை சுமந்து கொண்டிருப்பவன்!
தமிழா!
மூவேந்தர்களின் வாள் ஆண்ட பூமியை ! இன்றோ
முண்டாசு கட்டிக்கொண்டு ஆள்கின்றன பல முண்டங்கள்,
சேற்றிலும் சகதியிலும் விழ்ந்து கொண்டுள்ளோம் !
என்றோ பார்ப்பானியத்தில் விழுந்ததால்,
துர்நாற்றத்தை உணர ஆரம்பித்து விட்டோம்!
நீ இன்னும் சாக்கடை அரசியலை அனுமதிப்பதால்,
சிறகுகள் இருந்து பறக்க விட்டால்
சிறகுகள் முதிர்ந்து போகும் !
உறவுகள் இருந்து பழாக விட்டால்
வாழ்க்கை வெறுத்து போகும்!
உறவுகள் அழிந்து கொண்டிருக்க
நமக்கு ஏன் இன்னும் உறக்கம்,
இன்று எனக்குள் எரிகின்ற கோபம்!
நாளை உனக்குள்ளும் சுடர் விடுமடா ,
என் கிராமத்தின் இயற்க்கை
எந்தன்
இதயத்தை வருடிச்செல்ல !
என் தாயின் அரவணைப்பு
எந்தன் முச்சை உயிரோடு அணைக்க !
என் தங்கையின் சிரிப்பொலி
எந்தன் நினைவுகளை கொய்ய !
என் தோழியின் குறும்புகள்
எந்தன் சிறகுகளை வானில் பறக்க விட!
இத்தனை உயிருள்ள உணர்ச்சிகளுக்கும் மத்தியில்
நான் வாழ நினைக்கிறேன் தீப்பிழம்பாய்!
காக்கை இனத்தின் ஒற்றுமை அதன் நிறத்தில்!
இரவின் ஒற்றுமை அதன் வெளிச்சத்தில் !
சாலைகளின் ஒற்றுமை அதன் பிரிவில் !
கடலின் ஒற்றுமை அதன் அலையில் !
கார் மேகத்தின் ஒற்றுமை மழைத்துளியில்!
இத்தனை ஒற்றுமைகளுக்கும் இயற்கை சாட்சியாக!
நமது இனத்தின் ஒற்றுமை எதன் சாட்சியாக ?
அடேய் திராவிடத்தை உனது செருப்பாக
மாற்றிய கருநாக பாம்பே !!!!!!!!!!!!!!!!!!!
இட்லிக்கு மாவாட்ட முடியாமல் என் இன அழிவிற்க்கு
வாலாட்டி கொண்டிருக்கும் இத்தாலி சூனியக்காரியே!
நீங்கள் சிதைத்த கண்ணாடி துண்டுகளில்
மீண்டும் உங்கள் முகத்தை பார்க்க நினைக்கிறிர்கள் போலும் !
புரிந்துக்கொள் அந்த துண்டுகளின் கூர்மை கூட
காத்திருக்கும் ஒருநாள் உங்களின் உயிரை காவு வாங்க!
வேதங்களில் சொல்லாத வேதத்தை ! உனக்கு
உணர்த்த புறப்பட்டு விட்டான் எந்தமிழன்,
நீ கட்டவிழ்த்த கதைகளுக்கு ! பதில்
கொடுக்க புறப்பட்டு விட்டான் எந்தமிழன்!
மூடுபனி சாலையிலே நீ நடக்கும் பொழுது
உன் கண்ணுக்கு தெரிவது கருமை நிறம் மட்டுமே !
அது எந்தமிழ் இனத்தின் நிறம் ! சற்றும்
திரும்பி பார்த்து விடாதே ! காத்து கொண்டுள்ளான்
உங்கள் எகத்தாள பேச்சுக்கு முடிவுகட்ட,
என்றோ செய்த ஒரு தன்மான பிழைக்கு
எங்கள் உறவுகளை தொலைத்தோம் அன்றோ!
இன்றோ மேலும் ரத்தபலி கேட்டால்!நாங்கள்
ஒன்றும் உன் விருந்துக்கு வந்த கோழி அல்ல!
உண்மைகளை உலகுக்கு உணர்த்த வந்த புலி,
நாங்கள் பதுங்கும் நேரம் உனது தோல்விக்காக!
நாங்கள் பாயும் நேரம் உனது அழிவுக்காக !
வருவோம் மீண்டும் புலியாக !
நீ அழிய காத்திரு சுனாமியாக !
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்
அன்புடன் தோழன்
….மதன் (பகலவன்) ….
ஒர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்
எலும்பும் சதையுமாக
எரிந்து கொண்டிருந்தது
முள்ளிவாய்க்கால்.
இறந்த தாயின் முலையில்
குழந்தை பால் குடிக்க
இழுத்து வந்து
நெருப்பு மூட்டினர்
இருளின் நடுவே
சிலுவை தாங்கி
இறைவன் வருவான்
என நிலவைப் பார்த்தோம்
கண்களை மூடி
இது உன் விதி என்றது
எங்களின் வீட்டினுள்
யூதர்கள் நுழைந்தனர்
யேசுவைக் கேட்டனர்
ஆயிரம் ஆயிரம் சிலுவையில்
அவர்களை அறைந்தனர்
அடையாளம் காட்ட யூடாஸ் வந்தான்
மாவீரன் கல்லறையில்
மீண்டும் இரத்தம் வடிய
உயிர்த்திருந்தவர்களை
இன்னெருமுறை
புதைத்தனர்
கனவுகள் உடைந்து
கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது
இரத்தமும் சதையுமாய்
எழுப்பிய சுவருக்குள்
எங்கள் முகங்கள்
எரிந்து கருகின.
முள்ளிவாய்க்கால் முழுமையாக
மூச்சிழந்தது
ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது
அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்
கங்கையில் மிதந்த
பிணங்களைப் போல்
எங்களின் வயல்களில்
பிணங்கள் நீந்தின
எல்லாமே எரிந்து முடிந்தது
மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து
எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க
அங்கு யாரும்
சாட்சிகள் இல்லை
எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர
எஞ்சியிருப்பதற்கு
எங்களிடம் ஒன்றுமில்லை
மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்
கரைந்த படி திரிய
நாறிக் கிடந்தன பிணங்கள்
நாங்கள் மனிதரில்லை என்றே
மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்
புத்தரின் காவியினால்.
தாகம் தீர்த்தது சத்திய சோதனை
எங்களின் குருதியினால்.

மாவீரர் நாளில் கார்த்திகை பூ எடுத்து வாடா ..!

நவம்பர் 17, 2009
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
உங்கள் ‘உயிர்விலைக்கு’ எது இங்கே ஈடாகும்?
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும்.
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில்
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள்.
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர்.
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர்
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர்.
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்துது போனீர்-அந்த
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர்.
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின்
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர்.
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன்.
சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் ‘கால்த்தடம்’
கத்தும் கடலோசையில் உங்கள் ‘உயிர்மூச்சு’
காண்டாமணி ஓசையில் உங்கள் ‘கணீர்க்குரல்’
மூண்டெரியும் தீயினில் உங்கள் ‘பூமுகம்’
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் ‘புன்னகை’
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!
இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது.
எப்போதும் இல்லாமல் ‘வெயில்’ கொளுத்தித்தியும் எறியுது.
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..!
எவருக்குமே விளங்கவில்லை..!
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத ‘சிலுவை’ சுமக்கிறது..!
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத ‘வலி’ சுமக்கிறது..!
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து ‘எல்லாம்’ முடிந்த்தாய்
எக்காளம் போட்டு ‘இறுமாப்பு’ காட்டுகிறான்.
கண்மணிகளே..!
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்கிறோம்
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
யார் சொன்னது?
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.!
காலம் கனியகாத்திருக்கும் ‘கரிகாலனுக்கும்’ தெரியும்.!
கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!
மூன்று சாகாப்தமாய் தேசத்தாய் ‘விடுதலைக்கரு’ சுமக்கிறாள்
எப்போது வேண்டுமானாலும் ‘விடுதலைக்குழந்தை’ பிறக்காலாம்
இது கார்த்திகை மாதம்.! பெரும்பாலும் விடுதலைக்கு ‘பேறுகாலம்’.!
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு
நாளை பிறக்கும் நம் தேசத்தில்
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.!
‘முடியும்’ என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம்
விதைத்து முடிந்ததும் ‘அறுவடை’ கிடைக்காது.
விடிந்து எழுந்ததும் ‘கனவு’ பலிக்காது.
விடுதலை என்பது ‘உயிர்விலை’ கொடுத்துப்பெறுவது.
விடுதலை என்பது ‘நீண்ட நெருப்பாறு’
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.!
விழுவது என்பது வெட்கமல்ல.!
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.!
எழுவது பெரிதல்ல.!
எழுந்து அடிப்பதுதான் பெரிது.!
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம்
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.!
எங்கள் வயல் செழிக்கும்.!
காய்ந்து கிடக்கும் எங்கள் ‘பூவரசு’ பூப்பூக்கும்.!
நம்பு உன்னை நம்பு
உன் தேசத்தை நம்பு
தேசத்தின் புயல்களை நம்பு
அண்ணனை நம்பு அவன் நெஞ்சினில் எரியும் நெருப்பினை நம்பு.!
எவ்வளவோ செய்த அவன் இனியும் செய்வான் என நம்பு.!
எத்தனை ‘வலி’ சுமந்தோம்?
எத்தனை ‘உயிர்’ கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?
இல்லை
கல்லறைகளுக்குள் தமிழனின் ‘கனவுகள்’ கருக்கொண்டு கிடக்கின்றன.!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.!
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.!
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.!
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!
ஆனால்
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச்
சரித்திரம் சொல்கிறது.
இது கார்திகைமாதம்..!
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்
களமாடி வெல்லும் மாதம்
கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் எண்ணி காலம் கழிக்காதே.!
பூநகரி என்ன புதுக்குடியிருப்பையும் சேர்த்துப்பிடிக்கட்டும்
புலியின் ‘குணம்’ அறிந்தவனுக்கு ‘புதிர்’ புரியும்.!!!
நீ
கார்த்திகை பூ எடுத்து வா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..!
முட்கம்பி வேலிக்குள்
முகவரிகள் தொலைத்து
முடங்கிப்போனது நம் வாழ்வு

பட்டுணரும் வலிகளாலே
பலநாட்கள் கழிய
பட்ட்ட மரமாகிறது நம் வாழ்வு

எம்மை விட்டுச்சென்ற வசந்தம்
இன்னும் எட்டி எட்டிப் போக
ஏதிலியாய் வாடியே
ஏங்குகின்றோம் இங்கேயே

எம் இனிய ஊரைப் பிரிந்து
கூடிக் குலாவிய
உறவுகளைப் பிரிந்து
தவியாய்த் தவித்தேன்
தனி மரமானேன்

தனிமை வாழ்வியலின் வல்லிகளை
கடந்து வந்த நாட்களை
கண்முன்னே கொண்டு வர
எதிர்காலம் கேள்விக்குறியாகி
கரைகிறது யுகமாகிப் பொழுதுகள்

யுத்தத்தில் வென்றுவிட்டோம்
பயங்கரவாதத்தை
முற்றாக ஒழித்துவிட்டோம்
நீ மகிழ்ச்சியில் திளைக்கிறாய்
ஆனாலும் இங்கே
காகிதமாய்க் கிழிவது
நாம் தானே...

எமையெல்லாம் இந்த
திறந்த வெளிச்சிறையில்
அடைத்து வைத்து
என்னதான் செய்யப்
போகின்றாய்?
ஏன் தான் எம்மை
இப்படி வதைக்கிறாய்

கூட்டுக்குள் வாழ்வதற்கு
நாம் மிருகங்கள் அல்ல
கூடிக்குலாவிச் சுதந்திரமாய்
அவையே வாழ்கின்றன
இது உனக்கும் தெரியாதா?

நாமும் உன்னைப் போல்
மனிதர்கள் தான்
எமக்கும் ஆசை உண்டு
எல்லைகள் தாண்டியே
எங்கணும் சென்றிட
விருப்பமும் உண்டு

எம்மை விடு..
எம்மை வாழவிடு...
சுதந்திரக் காற்றை
நாமும் சுவாசிப்போம்
சுற்றியே எங்கணும்
சிறகுகள் விரிப்போம்.பலம் சில கொண்டு 
களம் பல கண்டு 
தளம் பல வென்ற -வேங்கைகள் நாளினை 
வளம் பல பெற்று 
புலம் தனில் வாழும் தமிழர்கள் நாம்- எம் 
தலம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம் 
குலம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய
நலம் தனைக் கடந்து பொது நலம்தனைக் கொண்டு 
புலம் தனில் உள்ளோர் -மீண்டும் 
பலம் தனைப் பெற்ரால் !
இளம் தலை முறையின் இனியவழிகாட்டலில் 
இழந்ததைப் பெறலாம் நாம் இழந்ததைப்பெறலாம் 
பளம் கதை போதும் -இனி 
பளம் கதை போதும்
கலம் கொண்டுதாக்க 
களம் இப்போது இல்லை 
பலம் கொண்டு தாக்க -போர்க் 
களம் கூட இல்லை 
வலம் வரும் உலகை 
புலன் கொண்டு பார்த்தால்! 
பலன் ஒன்று கிடைக்கும் 
புலம் தனில் நாங்கள் 
பலம் தனைப் பெற்று 
நிலம் தனை மீட்போம் -நாம் 
இழந்ததை மீட்போம்- தமிழ்!
ஈழத்தை அமைப்போம் !
தமிழ் ஈழத்தை அமைப்போம்! 
தமிழரின் தாகம் தமிழீழ்த்தாயகம்



கற்களாய் உம்மை நட்ட காணிகளில் தேடுகின்றோம், ஒரு புற்களைக்கூட காணோம், நிர் மூலமாய்க் கிடக்கின்றன. நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள் எந்தப் பூதம் விழுங்கியது. எங்கள் கண்மணிகள் பெருநாள்  நாள் இன்று.
உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்!
ஓ………….மாவீரர்களே
கண்ணயரா கண்மணிகளே
விண்ணேறிப்போனவரே
விலாசமின்றிப்போவீரோ?
பனிக்கின்றன விழிகள்
பதைக்கின்றது நெஞ்சம்
நினைக்க நினைக்க
என்னென்னோ எல்லாம் செய்கிறது உடம்பில்
ஆற்றாமல் அழுகின்றோம்
அழுத படி தொழுகின்றோம்: அறிவீரோ?
ஓ…………மாவீரச் செல்வங்களே
கற்களாய் உம்மை நட்ட
காணிகளில் தேடுகின்றோம்
ஒரு புற்களைக்கூட காணோம்
நிர் மூலமாய்க் கிடக்கின்றன
நெய்விளக்குப் பந்தங்கள் நின்றெரிந்த திருவிடங்கள்
எந்தப் பூதம் விழுங்கியது
இறந்த ஆத்மாக்களின் இல்லிடங்களை?
சுடலைத் தெய்வங்களை சுக்கு நுhறாக்கிய
சுத்த மடையா; யாராய் இருப்பர்?
விதையாய் நாம் விதைத்த விதைகுழிகள்
முற்றிலுமாய் காணாமல் போயினவே
முகவரிகள் அற்று
என் செய்வேன் இனி?
எத்திசை நோக்கி எப்படித் தொழுவோம்?
மண்துகள்களாய் தானும் வாழ்வதற்கே
உரிமை மறுக்கப்பட்டவரே – உம்மை
கண்டெடுத்து கைதொழுவதெந்நாள்?
கார்த்திகை 27
தவங்கிடந்து வரம் வேண்டும் நாளில்
நினைவுப்படங்களைக்கூட காணோம்
நீர்; நடந்த தடங்கள் மட்டும் கண்களில்
நீர்; செய்த குறும்புத்தனங்கள் மனங்களில்
நிழல் அற்றுப் போகாது உம் நினைவுகள்
உள்ளுக்குள் ஒரு சுடர் ஏற்றுவோம்: உமக்காக
தொலைத்து விடவில்லை எதையும்
உம் நினைவுகளை
உம் கனவுகளை
சுமந்தபடி திரிகின்றோம் எக்கணமும்
காத்திருக்கின்றோம் நம்பிள்ளைகள் வரவுக்காய்!

சுற்றி நின்று கொல்லுகிறான்…..

சுற்றி நின்று கொல்லுகிறான்
சூழ்ந்து நின்று கொழுத்துகிறான்
சற்றேனும் இரக்கமின்றி;ச்
செல்லு குண்டைக் கொட்டுகிறான்
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி    கண்ணீரைச் சொரியுது!
புற்றிலுள்ள பாம்போடு நம்முறவு பதுங்குது!
போக இடம் தெரியாமற் போய் விழுந்து கதறுது!
பெற்றவர்கள் படும் பாட்டைப் பேச முடியல்லை!
பேசாமைப் படுப்பதற்கும் மனசு கே ட்கல்லை!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!
கெட்டவ்ர்கள் பூமியிது!
கேட்பதற்கும் மனுசரில்லை!
சட்டங்களைப் போட்டு எம்மை;ச்
சவமாக மாத்திறார்!
சுட்டெரிக்க நம்ம சனம் சாகுது! ஓன்றும்
செய்ய முடியாமை மனம் வேகுது!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!
கட்டுக்கடங்காது துயர் காட்டுவெள்ளமாகுது
கைகொடுக்கஉலகம்தடைபோடுது!
நித்திரையில் நெஞ்சு கனமாகுது!
விட்டு விடமுடியாது தோழரே! நாங்கள்
விண்ணதிரக் கத்த வேண்டும் தோழரே! உண்மை
வெல்லும்வரை உழைக்க வேண்டும் !தோழரே!

2) உலகே ஒருகணம் எங்கள் முன் நில்லு!…

உலகே ஒருகணம் எங்கள் முன் நில்லு!
எம்விழி பார்த்து ஒருபதில் சொல்லு!
அலைகளின் நடுவில் அழிவினில் நின்று
அழியும் இனத்திற்குத் தாபதில் ஒன்று!
இன்னும் எத்தனை உயிர்ப்பலி வேண்டும்?
இனப்படுகொலையெனச்சொல்வதற்கு!
மண்ணில் எத்தனை மரணங்கள் வேண்டும்?
மனிதத்தின் கொலையெனச் சொல்வதற்கு!
எண்ணி யெத்தனை எறிகணை வேண்டும்?
இறப்பவர் எண்ணிக்கை கணிப்பதற்கு!
கண்ணில் எத்துணை நீர்வரவேண்டும்?
கவலையங்குண்டெனக் கணிப்பதற்கு!
என்ன காணிக்கை நாம் தரவேண்டும்?
எம்மையும் இனமென ஏற்பதற்கு!
எந்த மாணிக்கக் கல் தரவேண்டும்?
எம்மின அழிவினைக்காப்பதற்கு!
பெண்கள் மானத்தைக் காத்திடக்கதறிப்
பேச்சு மூச்சின்றி மரணிக்கி;றார்!
பிள்ளை குட்டிகள்

3) கன்றுகளா ! கன்றுகளா!

கன்றுகளா ! கன்றுகளா!
காலந்தந்த கன்றுகளா!
நீங்கள் வந்த நேரம் நல்ல நேரமப்பா!
நிச்சயமா ஈழம் வென்றே  தீருமப்பா!
குஞ்சுகளா! குஞ்சுகளா !
குரல் கொடுக்க வந்திகளா!
கூடுவிட்டு வந்த நேரம் நல்லதப்பா!
கச்சிதமாய் ஈழப்பாட்டைப் பாடுமப்பா!
கொன்று தள்ளி விடுவமென்றே
கங்கணந்தான் கட்டிநிற்கும்
சிங்களத்தின் சேட்டை பலிக்காதப்பா!
சத்தியத்தைப் பொய்கள் nஐயிக்காதப்பா!
சாமத்திலே வெய்யில் எறிக்காதப்பா!
இன்று இந்த வையத்தினை
ஆட்சிசெய்யும் மனிதரெல்லாம்
நின்று பிடிப்பார்களென்பதில்லையப்பா!
நீதி வெல்லும் காலம்ஒன்று உள்ளதப்பா!
நீங்கள் சொல்லும் வேதம்அன்றுவெல்லுமப்பா!

4) களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே…

களித்துண்டு வாழ்வமோ தமிழா! அங்கே
கரித்துண்டாய்ப் போகி;றான் தமிழன்!
விழித்தின்று குரல்கொடுதமிழா!- கொடும்
விதிவெல்லப் புறப்படுதமிழா!
பகிர்ந்துண்டு வாழ்ந்தவன் அன்று
பதியின்றியலைகி;றான் இன்று!
துயில்கொள்ளத்தரைகூடஇன்றி-அவன்
துடித்தங்குமடிகிறான்இரைதண்ணியின்றி!
அழிநச்சுவாயுவின்எரிபட்டுஉறவுகள்
உருகெட்டுச்  சாதல்கண்டும்
பரிவற்றுவாய்மூடிப்பதுங்கிடும் உலகத்தின்
சதிவெட்டக் குரல் கொடு தமிழா!
வெளிக்குண்மை சொல்ல வா! தமிழா! – நாம்
விழிமூடியுறங்கினால்யாருள்ளார் தமிழா!
அழிக்கின்றபகைவெல்வோம் தமிழா!- உளம்
அனல்பொங்க உலகிற்குஉண்மைசொல்தமிழா!

5) அன்னைத்தமிழினம் துன்பத்தீயினில்

அன்னைத்தமிழினம் துன்பத்தீயினில்
அழிந்திட விடுவோமோ?
முன்னைப் பழங்குடி கண்ணில் நீர்மழை
பொழிந்திடவிடுவோமோ?
எண்ணக் கூசிடும் வண்ணம் எம்மவர்
குழிகளில் விழலாமோ?
சின்னக் குழந்தைகள் பெண்கள் கதறியே
அழுவது முறையாமோ?
மன்னராண்டதும் மாட்சிகொண்டதும்
மாண்டவர் கதைதானேர்?
கன்னற்தமிழிலே காப்புயுhத்ததும்
வீண்புகழுரைதானோ?
தின்னத்தானிவர் தோன்றினாரெனக்
காண்பவர்நகையாரோ?
இன்னுமேனிவர் இறந்திலராமென
நாண்பட வசையாரோ?
இந்தப்பூமியில்யாருளர்அவர்க்கெனும்
சொல்லெழவிடலாமோ?
சொந்தச்சோதரர்இவர்க்கிலராமெனும்
சொல்வரவிடலாமோ?
வந்தப+மியில் வாழுவம் யாமெனும்
கல்மனம்வரலாமோ?
வெந்ததேசத்தைவேற்றினமாண்டிட
நம்மினம்தரலாமோ?

6) உலகம் உறங்கினால் உறங்கட்டும்!

உலகம் உறங்கினால் உறங்கட்டும்!
உலகத்தமிழனே உறங்காதே!
இதயம் இரங்கினால் இரங்கட்டும்!
இளைய தமிழனே தயங்காதே!
உதிரம் பெருக்குது எம்தேசம்!
உயிரையெரிக்குது இனப்பாசம்!
புதினம்கேட்டது இனிப்போதும்!
பூமியதிர்ந்திடஇடுகோஷம்!
வளைய நின்று எம்இனத்தைக்கொல்கிறான்
வட்டமிட்டுச்செல்குண்டைப்பொழிகிறான்
முளையிற் தமிழனைக்கிள்ளநினைக்கிறான்
மூர்க்கமாய் இனக்கொலையைநடத்திறான்!
இதனைக்கண்டுமிவ்வுலகம் உறங்குது
எட்ட இருந்துதான்முனகியிரங்குது!
மழையும்வெய்யிலும்பனியும்எங்களை
வாட்டிவதைக்கக்கூடும்!
களைப்பும்காய்ச்சலும்சளியுமெங்களை
வீட்டிலடைக்கக்கூடும்!
தளர்ச்சிவென்றுநாம்தமிழரென்பதை
மூச்சில்நிறைக்கவேண்டும்!
தொடர்ச்சியாகஎம்முயற்சியுழைப்பினால்
நீச்சலடிக்கவேண்டும்!

7) தீக்குழம்பிற் துடிக்குதடா தமிழர் தேசம்!

தீக்குழம்பிற் துடிக்குதடா தமிழர் தேசம்!
தீக்குளித்து மடியுதடா தமிழர் தேகம்!
தூக்கத்திலும் வெடிக்குதடா எமதுசோகம்!
காக்கும் வழிதேடுதடா தேசப்பாசம்!
அந்தோ கொடுமை
அசுரரின் பிடியில்
அன்னைத் தாய்நிலம் கருகுவதோ?
செந்தீக்குழியிற்
செந்நீர்வடியச்
சிதறித் தமிழினம் கதறுவதோ?
சேர்ந்து பிறந்தவர்
செல்லிலும் குண்டிலும்
மாய்திடல்காண்பது சம்மதமோ?
சோர்ந்து படுத்துநாம்
சுவைத்துக்கிடப்புது
சுகமெனச்சொல்வது எம்ம்தமோ?
வாழ்ந்த நிலத்தில்
வதங்கித்தவிக்கும்
வேதனை எவர்க்கும் புரியலையோ?
நேர்ந்த நிலைக்கு
நிம்மதித்தீர்வை
வழங்கிட எவரும் இரங்கலையோ?

8) தானாடா விட்டாலும் – எம்  தசைகளாடுதே!

தானாடா விட்டாலும் – எம்  தசைகளாடுதே!
தாய் நாட்டின் திiசியிலெங்கள் விழிகளோடுதே!
தேனாக எங்கள் தமிழ்  உயிரிலுர்றுதே!
தேசத்தின் சோகமெங்கள் உணர்விலூறுதே!
வுhனமதில் வந்து குண்டை
வாரிக்கொட்டிச்செல்லுகிறான்!
சேனைகட்டி நின்று எல்லை
ஊரில்வெட்டிக்கொல்லுகிறான்!
மான பங்கம் செய்து பாவம் வாரிக்கட்டுகிறான்!
ஊனமுறக் கண்ணிவெடிக் காட்டிற் தள்ளுகிறான்!
பானங்கஞ்சி பாலுமின்றி;ப்
பாய்படுக்கை யேதுமின்றி
ஆன உடை கூட இன்றி
அலைகிறார்களே!
தாயகத்தில் நாதியின்றி
அழிகிறார்களே!
தாய்மரணம் அணைத்தபின்னும்
தாய்மார்பைச்சுவைத்தபடி
சேய் தூங்கும் காட்சி நாங்கள் காண்கிறோம்!
வாய்மூடி நெஞ்சு ஏங்கி நோகிறோம்!

9) சத்தியத் தீயில் வந்தவரே!

சத்தியத் தீயில் வந்தவரே!-தமிழ்ச்
செம்மொழித்தாயின் சந்ததியே!
நித்திலத்தீவின் சொந்தங்களே!-எம்
நீள்வரலாற்றின் சந்தங்களே!
கட்டியணைக்கின்றோமிங்கே நாங்கள்! – நல்ல
காலம்பார்த்து நேரில் வந்தீர் நீங்கள்!
ஓற்றுமைக் காற்றை வீசி வந்தீர்!
ஓற்றை நீதியோடு வந்தீர்!
கற்றவராகக் கண்திறந்தீர்!
நற்றவப் பேறாய் நீர்பிறந்தீpர்!
எத்தனை கோடி இடர்வந்தாலும்
எதிர்த்து ஆடும் பலம் படைத்தீர!
இத்தரை மீது இறைமையோடு
அணைத்துவாழும் வளம் உடைத்தீர்!
கொற்றவனேனும் குற்றமிழைத்தாற்
குமுறியெழும் அறத்தில் நின்றீர்!!
நிச்சயம் நீங்கள் வெற்றி கொள்வீர்!
இமயமாகப் பெற்றி கொள்வீர்!

10) சரித்திர ஏட்டினைப்புரட்டு! – அட

சரித்திர ஏட்டினைப்புரட்டு! – அட
சர்வதேச உலகே!
நெரித்தின உரிமைகள் பறித்தே – நீ
நிகழ்த்திய கொடுமைகள் புரியும்!
விரித்தனை உன் விஷச்சிறகை!- பிறர்
வீழ்ந்திட மிதித்தனை விளைத்தனை கொடுமை!
பறித்தனை படைத்தவர்பொருளை!
பயத்தினை விதைத்தே புதைத்தனை அருளை!
அரசுகளோடு அழகிய மண்ணில்
அமைதியில் வாழ்ந்தவர் நாங்கள்!
படையுடன் வந்தே பறிமுதல்செய்தே
பதியின்றி ஆக்கினை யெம்மை!
கடையினமாக்கிக் காப்பவரின்றிப்
பிறரிடம் எங்களை விற்றாய்!
இடர்ப் படும்போது எங்களை மறந்தே
இனப்படுகொலை பட விட்டாய்!
சுதந்திரமென்ற பெயரினிலெம்மை
நிரந்தர அடிமைகளாக்கிப்
பகையிடம்பிச்சை யிரந்திடும் நிலையில்
அலைந்திட ஆக்கினீர் உண்மை!

11) பாவியரே உங்கள்…

பாவியரே உங்கள்
பார்வையிலே எங்கள்
பாலகர்கள் படுமவலம் படவில்லையா? – அங்கே
கூவியழும் தாயர் முகம் தெரியலையா?
ஏவுகணைப் பேய்நெருப்பை
ஏவுகின்ற போதுமக்கு
எங்கு விழுமதுவென்று புரியலையா? – எங்கள்
சாவுகளின் கோர முகம் தெரியலையா?
ஆவிமனம் துடித்திங்கே
அகிலத் தழிழ் நெஞ்சம்
கூடிக் குரல் கொடுப்பதுவும் கேட்கலையா?- நாங்கள்
கொந்தளித்து நடப்பதுவும் தெரியலையா?
பாரிலுள்ள பலமெல்லாம்
பகிர்ந்தளித்து நம்மினத்தைப்
படுகொலை நீர் செய்கின்றீர் புரியலையா?
நடுமனிதர் நான்கிருவர் இங்கிலையா?

12) பத்தியெரியுது வயிறு!


தியாகம்.. 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! 
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! 
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! 
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? 
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! 
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். 
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் 
ஆணிவேரான ஆலமரங்களே..! 

வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... 
வீழ்ந்தாலும் விதையாக 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதில்லை 

ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் 
இல்லை 
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். 
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் 
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். 
மணியோசை கேட்டால் மனமுருகும்... 
மாவீரர் கல்லறையில் உயிர் கருகும்... 
கண்களிலே கண்ணீர் கவி எழுதும் 
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும். 


கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில் 
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள். 
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த 
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர். 
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர் 
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர். 
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்து போனீர்-அந்த 
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர். 
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின் 
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர். 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன். 

சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்' 
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு' 
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்' 
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்' 
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை' 
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று? 

தாயகமே தாயாக 
தலைவனே உயிராக 
தமிழ் மானம் பெரிதாக 
தம் உயிர் தந்தவர்கள் 

எரித்தாலும் கடலினுள் கரைத்தாலும் மண்ணினில் புதைத்தாலும் 
மாவீரன் மறைவதில்லை 
மாவீரம் அழிவதுமில்லை 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! 

இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது. 
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது. 
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..! 
எவருக்குமே விளங்கவில்லை..! 
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..! 
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி' சுமக்கிறார்கள் 
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்ததாய் 
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான். 

கண்மணிகளே..! 
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள் 
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்க தவிக்கிறது மனசு... 
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று? 
எவனுக்குமே விளங்கவில்லை..! 
யார் சொன்னது? 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.! 
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.! 

கார்த்திகை பூ எடுத்து வாடா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..! 

'முடியும்' என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம் 
விதைத்து முடிந்ததும் 'அறுவடை' கிடைக்காது. 
விடிந்து எழுந்ததும் 'கனவு' பலிக்காது. 
விடுதலை என்பது 'உயிர்விலை' கொடுத்துப்பெறுவது. 
விடுதலை என்பது 'நீண்ட நெருப்பாறு' 
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.! 
விழுவது என்பது வெட்கமல்ல.! 
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.! 
எழுவது பெரிதல்ல.! 
எழுந்து அடிப்பதுதான் பெரிது.! 
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம் 
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.! 
எங்கள் வயல் செழிக்கும்.! 
காய்ந்து கிடக்கும் எங்கள் 'பூவரசு' பூப்பூக்கும்.! 
நம்பு உன்னை நம்பு 
உன் தேசத்தை நம்பு 
தேசத்தின் புயல்களை நம்பு... 
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு 
நாளை பிறக்கும் நம் தேசத்தில் 
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.! 

இது கார்திகைமாதம்..! 
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்...!!! 
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்...!!! 



எத்தனை 'வலி' சுமந்தோம்? 
எத்தனை 'உயிர்' கொடுத்தோம்? 
எல்லாமே வீண்தானா? 
இல்லை 
கல்லறைகளுக்குள் தமிழனின் 'கனவுகள்' கருக்கொண்டு கிடக்கின்றன.! 
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.! 
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.! 
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.! 
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!யுகங்களும் ஆகலாம்..!!! 
ஆனால் 
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச் 
சரித்திரம் சொல்கிறது. 

அதுவரை.... 
நீ 
கார்த்திகை பூ எடுத்து வா.! 
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..! 

தமிழ்ப்பொடியன்