இதுவன்றோ கவிதை

அடிமை வாழ்வும்.. ஆண்டவன் மகிமையும்..!

brahmin_270
தன் பேரழகினால்..
நம்மை கொள்ளையடிக்கும்
கோயில் சிற்பங்களின்..
எல்லையற்ற இரசிகன் நான்..!
ஒன்று பரம்பொருள்
என்று உணர்ந்தால்..
எதற்கு இத்தனை தெய்வங்கள்..?
சில சில்லறைகள் -
சில்லறை சேர்க்கத் தானா..?
தீபத் தட்டை ஏந்தி நிற்கும்
அய்யர்-
வயிற்றைக் காட்டி நிற்கிறார்
வெளிச்சப்பிச்சை…1
உன் ஆகம விதிகளால்
ஆவது ஒன்றுமில்லை..!
உழைக்கும் மக்களை
உருக்குலைத்த..
தீண்டாமையைத் தவிர..!
ஆறு காலப் பூசை..
எட்டுக்காலப் பூசை
என்பதெல்லாம்..
நீயென்னை-
எத்தனை முறை ஏமாற்றுகிறாய்..?
என்பதன் எண்ணிக்கை மட்டுமே..!
தீட்டுப்பட்டவளை மறுக்கும்
சிலைகளுக்குத் தெரியாது..!
மானிடர் பிறப்பின்
மகத்துவம்
மாத விலக்கால் நிகழ்கிறது
என்று..!
லிங்கத்தைக் கும்பிடுவாய்..!
யோனிக்கு இல்லை
லிங்கத்தின் மதிப்பு..!
படைப்பின் -
பேராற்றலை மறுக்கும்
ஆணாதிக்கத்தின் பெருங்கூறு..!
உழைக்கும் மக்களின்
எல்லா சக்தியையும்
உறிஞ்சிக்கொண்டு..
“சக்தி வழிபாடு” நடத்துகிறாய்..!
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றைக்குறியீடாய்
நிற்கிறது
சங்கிலியால் கட்டப்பட்ட
யானை..!
வழிபாட்டை வழிமறிக்கும்
நந்தியான பசுவை..
வெட்டித் தின்றான் பறையன்
பார்ப்பனனுக்கு
பாலும் நெய்யும்
கிடைக்காத படி..!
காதலர்களின்-
சந்திப்பு நிலையங்களாக இருக்கும்
கோயில்கள்
சாதிகளின் உற்பத்தி நிலையமும்
ஆதலால்
காதல் நிறைவேறாததன்
காரணங்களாகவும் உள்ளன..!
கோயிலுக்குள்
காவல் நிலையம்..!
உலகைக் காப்பவனுக்கு
உள்ளூர்க் காவலர்கள்
எந்திரத் துப்பாக்கியுடன்
பாதுகாப்பு..!
அச்சம் என்பது
ஆண்டவன் ஆனால்..
வீரம் என்பது
பகுத்தறிவின் வெளிப்பாடு..!
- அமீர் அப்பாஸ்

பீச்சாங்கை

tamil workers001
எது சோத்தாங்கை
எது பீச்சாங்கை
மலம் அள்ளும்
தோட்டித் தாய்க்கு..?
‘ஆசிட் ‘ ஊற்ற
தெரிந்தவள்தான்
ஆனாலும்
அரசியலில் அவளில்லை..!
கழிப்பறைகளில்தான்
வேலை என்றாலும்
கழிக்கும் வேலை மட்டும்
அவளுக்கு கழிப்பறைகளில்
கிடையாது..!
மூக்குப் பிடிக்கத்
தின்று கழித்ததை
மூக்கை பிடிக்காமல்
வெளியேற்றுபவள்..!
சோற்றில்
கை வைப்பதற்காக
தன்
சோத்தான்கையை
இழந்தவள்..!
அத்தனை
ஷாஜகான்களும்
அவளுக்காய் கட்டியது
‘பீங்கான் ‘ தாஜ்மஹால்தான்..!
எந்த ஒரு மிருகத்தின்
கழிவைக் கூட
மற்றொரு மிருகம்
அகற்றும் அவலமில்லை
மனித மிருகத்தை தவிர..!
அவளுக்காய்
திறக்கும் ஒரே கதவு
கழிப்பறையில்
மட்டும்தான்
இருக்கிறது..!
அவள்
தேடிக்கொண்டேயிருக்கிறாள்
நம் கழிவுகளில்
தொலைந்துபோன
அவள் வாழ்வை
மட்டுமல்ல,
மனிதர்களையும்தான்..!

வெள்ளி, 5 நவம்பர், 2010

வியாழன், 4 நவம்பர், 2010


வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது..

வளைய முட்கம்பிகள்
வற்றியொடுங்கிய
உடலும் முகமும்
வயதையும் வடிவையும்
வைத்து
விடிய விடிய நடக்கும்
விசேட விசாரணைகள்

நாளைய பொழுதாவது
நன்றாய் விடியாதாவென
நாட்களை எண்ணி
புரளும்
நள்ளிரவென்றில்
மப்படித்த சிப்பாயின்
கைகள் என்னை
தட்டியிழத்துப்போகும்

கைத்துவக்கின் அடி
கவட்டுத்துவக்கின் இடி
கசக்கப்படும் முலைகளில் கடி
அடி...இடி...கடி..
அடுத்தடுத்து விசாரித்தில்
அடிவயிற்றில்வலி

மெல்லப்பெய்த மழையில்
மகிழமரத்தில்
மெதுவாய்
சாய்ந்துகொண்டேன்
கால்கள்வழியே
கரைந்தோடிய
கட்டிஇரத்தம்
கண்டதும்
கவலையடைந்தான்
காவலிற்கு நின்ற
சிப்பாய்

அவன் ஆண்மையில்
அவன் சந்தேகப்பட்டு
அவமானமடைந்திருக்கலாம்
ஆனாலும்
யோனிகள் மீதான
விசாரணைகள்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்..
ஏனெனில் நாங்கள்
தமிழிச்சிகள்

சுபங்களா


ங்கள் இரசித்த கவிதை வரிகள் என்றால் இதைக் கூறலாம். இந்தக் கவிதையை ஓர் மிகவும் பழைய சஞ்சிகையில் யாழ்ப்பாணத்தில் வாசித்தேன். இதை வடித்தவர் யார் என்று தெரியவில்லை. கவிதையின் முழுப்பகுதியும் நினைவில் இல்லை. கீழ்வரும் பகுதி பசுமையாக நினைவில் உள்ளது:

என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை
முன்னி அரவணைத்து முலைத்தடத்தில் முகம்புதைத்து,
கன்னிச் சிறையுடைத்து கருப்பாதைக் காரிருட்டில்
என்னையே யானிழந்து ஏதுமிலா தாகிவிட..
என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்...

குய்யத்துக் கும்மிருட்டில் குருமணலாய் சிறுதுளியாய்
பையக் குடிபுகுந்து பருத்துத் திரண்டுருண்டு,
கையாகிக் காலாகி கண்மூக்குத் தானாகி
வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை,
கையெடுத்து மெய்யணைத்து கனகமகிழ் அமுதூட்டி,
நெய்யலைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி,
என்னை வளர்த்தாளின் இடைநீங்கி மடிநீங்கி,
தன்னை மெல அறிந்து, தாய்ப்பாலின் சுவை மறந்து
என்னையே யானறியும் இளைஞனென மாறியபின்,
என்னையே யான்நோக்கி எண்ணுகின்றேன் எண்ணுங்கால்..

திங்கள், 1 நவம்பர், 2010


யாருமற்ற சபையின் மௌனங்கள்..
இளங்கோ வெள்ளி, 29 அக்டோபர் 2010 18:45
*
தோல்விகளின் வரலாற்றை
நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது
நம்பிக்கையிழந்த அடையாளங்கள்
அதன் மேஜையில்..
நகக் கீறலின் வடுவைப் போல்
தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்
வனையப்பட்ட மௌனங்கள்..
சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

வாசல் > கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-10-23

வெள்ளாடுகளின் பயணம்
துவாரகன்
இவரின் பிற கவிதைகள்


வெள்ளாடுகளின் பயணம்
----------------------------------

ஆட்டுக் கட்டையை விட்டு
எல்லா வெள்ளாடுகளும்
வெளியேறி விட்டன.
கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று
என் அம்மா
ஒரு போதும்
வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை.

இப்போ அவை
பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு
ஊர் சுற்றுகின்றன.

சிதைந்துபோன கொட்டில்களில்
தூங்கி வழிவனவெல்லாம்
பறட்டைகளும் கறுப்புகளும்
கொம்பு முளைக்காத குட்டிகளும்
எனக் கூறிக்கொள்கின்றன.

தம்மைச் சுற்றிய
எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும்
விடுப்புப் பார்ப்பதற்கும்
தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப்
பங்குபோட்டுக் கொண்டு
எஜமானன் போல் வருகின்றன.

பட்டுப்பீதாம்பரமும்
ஆரவாரமும்
நிலையானது என்று
இதுவரை யாரும் சொல்லவில்லையே!

ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன்
கம்பிமீது நின்றாடும் நிலையில்
எங்கள் ஆடுகள்.

விடியலுக்காய்ப் பயணிப்போம்....

கவிதை - இளங்கவி


முச்சந்திவரை கொண்டுவந்து
மூலை திரும்ப முன்
முடிவைத் தவறவிட்ட
துரதிஸ்ரசாலிகள் நாம்.....

ஆம் நான் கூறுவது
நம் சுதந்திரத்தைத் தான்......
.......

முடியாததொன்றை
முடித்துக்காட்டி....

பணியாத சிங்களத்தை
பணிவித்துக்காட்டி....

உலகுக்கே தமிழரை
யாரென்று காட்டி.....

தமிழனென்றால் மூக்கில்
விரலை வைக்கக் காட்டியவர்கள்....
இன்று வீடுகளில்
முடங்களாய்....

வீதிகளில்
பிணங்களாய்....
.
சிறைகளிலே
ஜடங்களாய்.....

மொத்தத்தில்
செத்துக் கொண்டிருக்கும்
பிணங்களாய்.....
.......

வீழ்ந்து கிடக்கும் வீரம்
மீண்டு எழ
ஆண்டுகள் பல...ஏன்!
பல நூற்றாண்டுகள் ஆகலாம்.....
ஆனால் வீறுகொண்ட
சுதந்திர தாகத்தை
தொடருமென்று முன்னெடுக்க
முடியுமென்று சொல்லிப் பார்
அது உன்னால்
நிச்சயம் முடியும்.....
முடியாதென்றால் அது
என்றுமே முடியாது தான்.....
...........

முடியாதென்று நம்மிடம்
அடிவாங்கி ஓடியவன்
முழு உலகையும் திரட்டி
எம்மையே
மூர்ச்சையடைய வைத்துவிட்டானே.....!
அவனாலேயே
அது முடிந்ததென்றால்....
உன் சுதந்திரதாகத்தை
முன்னெடுக்க
உன்னால் ஏன் முடியாது.....!
..............

நீர்மூழ்கியும் செய்தவன்.....
நிஜமாக வானிலும் பறந்தவன்.....
பொங்கும் கணைகளால்
எதிரியை....
ஆயிரமாயிரமாய் கொன்றவன்....
அனைத்தையும் செய்த
நம் தலைவன்
மூட்டிய நெருப்பை
நெஞ்சில் வைத்திருக்கும் உன்னால்
நிச்சயம் எதுவும் முடியும்......
உன் சுதந்திரத்தை முன்னெடுக்க
உன்னால் மட்டுமே முடியும்......
...........

சளிவந்து மூக்கடைத்தால்
கிலிகொண்டு ஓடாமல்
வாயால் சுவாசித்து
வாழப் பழகும் உனக்கு
ஆயுதம் மெளனித்தால்
அகிம்சை இல்லையா.......
உலகின் ஆதரவு தேடத்தெரியாதா.....
அடிக்கிறான் என்றுசொல்லி
உலகின் முன் அழத்தெரியாதா....!

அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகருமென்று
படிக்க மாத்திரம் உனக்கு
பழமொழி சொல்லவில்லை......
வாழ்க்கையில் பாவிக்கவும் தான்.......

இருண்டவுடன்
படுக்கையில் சுறுளும் நாம்....
விடியல் கண்டதும்
வேலைக்குப் போவது போலத்தான்.....
எங்கள் விடியல் போரில்
இருண்ட பாதைப் பயணம் இது....
விசையாய் செல்
விடியல் வெகு தூரமில்லை....

ஆடுகளுக்காக...


அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம்
விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக
சலனமின்றி மூப்படைகிறது
சந்ததிகளின் ஆயுள்.

விடியலைப் பறைசாற்றும் நோக்கில்
ஆர்ப்பரித்த சேவல்களால்
வாழ்தலின் வேட்கை அதிகரித்து
உயிர்த்தெழுந்த போதெல்லாம்
சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன.

சிறை மீட்பாளர்கள்
சிந்திக்கும் அவகாசத்தில்
கூண்டுக்குள் வேட்டையாடல்கள்
விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும்.

கசாப்புக் கடைக்காரனின்
நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள
பிடியளவு தழைகளையும்

ருசித்துத் தின்னும் ஆட்டின்
இறுதி நிமிட வாழ்தலின்
நிதானத்திற்கு நிகரானது
ஆதிக்குடிகளின்
நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்.

ஓர்மத்துடன்
ஒவ்வொரு கத்திவீச்சுக்கும்
தலை மறுக்கும் ஆற்றலுடன்
ஆடுகள் துணியும்.

ஓர் தினம் பட்டி உடைக்கும்.
பச்சைப் பெருவெளிகள் தேடி
படையெடுக்கும்.

பின்னாக வயிறு புடைக்க மேயும்.
வெளி முழுவதும் உலவும்.
அவ்வெளியே
பின் நாளில் பட்டியாக்கப்படும்.


http://www.vaarppu.com/view/2269/

இனி நாய்கள் மட்டுமே..



கதவோரம் தாழ்வாரம்
அடுப்படிச் சாம்பல் மேடு.. என
சுருண்டு கிடந்த நாய்கள்
ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன
ஒன்றைச் சினைப்படுத்த..

தமக்குள் தாமே.. தம்மை முறைத்தும்
தமக்குள்ளே தம்மையே கடித்தும்
ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்
முதன்மைப்படவும் முதலில் ஏறவும்

போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்
தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்
அதற்காய்...
முழுவதையும் இழந்தாயினும் புணர்வது
எனவும் போல
தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்
குறிகள் விறைத்து குமையும்.
ஒன்றையே புணர..

சினைக்குள் சாத்தியம்
நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ
குரைக்கக் கூடியதாகவோ
உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ
வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ
சில நாய்கள்.
நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.

இனியவை
விரும்புவதும் ஏற்பதுவும்
எவரும்
பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்
எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.
ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்
எலும்பு மீதமாக இருக்கலாம்.

இந்த நாய்கள் காத்திருக்கும்.

சொச்சமாகவேனும்.. எதை வீசினாலும்
கவ்விக் கொள்ளும்.
விருந்தெனச் சண்டையிட்டு
அதையும் சகதியில் வீசும்.
பின்
வீறாப்போடு வெறுங்குடலைக் கழியும்.
கடைசியில் எச்சிலூறி
எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.
நாய்கள்.

வேட்டைப் பற்களிருந்தாலும்
விரல் நகம் நீண்டிருந்தாலும்
அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்
எலும்புகள் தானென்றில்லை..எதுகிடைத்தாலும்
நாக்கொழுகித் தின்னும்.

தமக்குள் தாமே முந்தும்..கடிக்கும்..
இவை
நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்...

சுதந்திரம் நோக்கிப் பயணித்து
சூனியத்தை அடைந்த
சூட்சுமத்தில் தான் இன்னும் எமது
வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது

முகங்கள் தொலைந்த உருவங்களில்
என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள்
அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள்
வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி
அண்ணாந்து ஊதியபோதும்
முகத்தை உணரமுடியவில்லை

நாம் தொலைந்து போனோம்
எம்முடன் எடுத்துவந்த
சாப மூட்டைகளில் தலையை சாய்த்து
புலம்பிக்கொண்டிருக்கின்றோம்

சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து
ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம்
சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று
அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது

விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும்
பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது
இருந்தும்
நடைபிணங்களின் வாய்கள்
ஓயாது அரசியல் பேசுகின்றது

தெருப்போக்கனாய் நாடோடியாய்
அகதியாய் அடிமையாய் சுயம் மாறியபோதும்
எம்மோடு வாழும் சாபங்களை
வாழவைத்துக்கொண்டிருக்கின்றோம்

தெற்கில் இருந்து வந்த டாங்கிகளும்
வடக்கில் இருந்து வந்த தேர்களும்
பலப்பரீட்சை நடத்தியதில்
வன்னி உருக்குலைந்து போனது
வடம் பிடித்த மக்கள் முடமாகிப்போனார்கள்

ஊனமுற்ற உடல்கள்
போரின் வேதனையை பற்றி பேசுகின்றது
ஊனமுற்ற மனங்கள்
போரின் தோல்வியைப் பற்றி பேசுகின்றது

புதிய தேர்கள் தயாரக இருக்கின்றது
சோடினைகள் பலமாக இருக்கின்றது
வடம்பிடிக்கும் மக்கள் முடமாகிவிட்டார்கள்
ஆனாலும் தேரிலிருந்து இறங்க முடியாது
முடமானவர்களை தூக்கிவிடவும் ஏலாது
வெள்ளை வீதிகளில் வெள்ளோட்டம் விடவே
நேரம் போதாமல் இருக்கின்றது.

சத்தியமும் தர்மமும்
சாவுகளை உயிர்ப்பிப்பதில்லை
சிந்திய கண்ணீரை மீண்டும்
உணர்வுகளுக்குள் சேர்ப்பதில்லை
இருந்தும்
எம்மிடமே இல்லாத இரண்டும்
எமக்கு துணை இருக்கும் என்று நம்புகின்றோம்

தேரில் இருக்கும் வரை உங்களுக்கு
கண்ணீர் தீர்த்மாக தெரியும்
பசி விரதமாக தெரியும்
குருதி குங்குமமாகத் தெரியும்
அழத்தென்பில்லாத உணர்வுகள்
பக்தியாகத் தெரியும்

தேசிய வரத்தை தவிர
உங்களால்
எதையும் அவர்களுக்காக
வழங்கமுடியாது

நீங்கள் தரும் வரமாகவே
அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை
உங்களால்
எக்காலத்திலும் உ

அந்த ஒற்றை மரம்
பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று
பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது
கூடுகட்டிக் குருவிகள் வசித்தது
மரம் முழுக்க மந்திகள் இருந்தது
மரங்கொத்தி பறவையும் மறைப்பில்
குருவிச்சை கூட குசியாய் இருந்தது
எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது
உண்ணக் கனி கொடுத்தது
உறங்கப் பாய் கொடுத்தது
ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது
ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து
கொலை செய்யவும் துணிந்தது
கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும்

சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம்
இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று
எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌
காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை
தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு
காரணம் கிடைத்தது பெரிய மரம் உள்ள வளத்தையெல்லாம்
உறிஞ்சுது என உரைத்தது உலக மரங்களுக்கு
காலத்துயர் கடுங்காற்று சூறாவழியாய் சுழற்றி
பெரிய மரத்தைச் சாய்த்துவிட்டது

மரம் சாய்ந்ததும் மந்திகளுக்கு போக்கிடம் ஏது
மரநிழலில் படுத்தவன் கூட மரத்தை விமர்சிப்பது புது ட்ரெண்டு
ஆனால் மரமோ இன்னும் விறகாய் எரிந்துகொண்டிருக்கிறது
அதிலும் குளிர்காயச் சிலர்
அந்த மரம் மீண்டும் துளிர்க்காதா எனச் சிலர்