திங்கள், 1 நவம்பர், 2010

யாருமற்ற சபையின் மௌனங்கள்..
இளங்கோ வெள்ளி, 29 அக்டோபர் 2010 18:45
*
தோல்விகளின் வரலாற்றை
நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது
நம்பிக்கையிழந்த அடையாளங்கள்
அதன் மேஜையில்..
நகக் கீறலின் வடுவைப் போல்
தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்
வனையப்பட்ட மௌனங்கள்..
சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக