ஞாயிறு, 18 டிசம்பர், 2011


மடத்துவெளி முருகனுக்கோர் பாடல் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

மடத்து வெளியூர் குடிகொண்ட முருகா! எங்கள் 
மனத்து வெளியெங்கும் குடியிருக்கும் தலைவா! எங்கள்
இனத்து இழிநிலையைப் பாராய்! நினைந்து நினைந்து
உனைத் தொழுதோம். நிம்மதியை மீட்டுத் தாராய்!
அனைத்துத் துன்பமும் போக்கி ஆதரித்து எம்மை
அணைத்து ஆறுதல் தரவேண்டும் தலைவா!
ஆனைமுகன் தம்பியே! மானமுடன் வாழவிடு நம்மையே!

வரவேற்பு முகப்பில் குடி கொண்ட பாலனே!
சிரமேற் கைகூப்பி உன்னடி பணிந்தோம்; வந்தாரை
வாழவைத்த குடியின்று நொந்தாரைப் போல் சீரழிகிறதே!
செந்தாரைக் கழுத்தில் சூடிக் கொண்டவனே! உன்தாள்
பணிந்தெழுந்தோம். எம் தாய் தந்தையர் வாழ்ந்த பதியில்
எமை மீண்டும் வாழ வைப்பாயா? வந்த துயர் யாவும் பொடியாக்கி சிந்தை வெளியெங்கும் துலங்கக் குடிகொள்வாய் குகனே!

பச்சைப் பசேலென நெல் வயல்கள் சூழ்ந்த பதியில்
இச்சை தீர்த்தருள பச்சை மயில் மீதேறி வருவாயா?
உழுது விளைவித்து உண்டு மகிழ்ந்தவர் அழுது
தொழுதடிமை செய்குவதோ? பிச்சைப் பாத்திரம்
ஏந்த விட்டதேனோ? முச்சை அறுந்த பட்டம் போலானோம்.
நித்தம் தொழுதவர் தம் பித்தம் தெளிய வைத்து
சித்தம் தெளிவிப்பாய்! சிவபாலனே!

முகத்துக்கு நேரே முகம் பார்த்துக் கைகூப்பி வரவேற்ற
எங்கள் தேசத்து ஊர்களின் முகப்பு வாயில்களில்
விழி மூடிய புத்தன் சிலை இருப்பதோ? இது எங்களினப்
பண்பாட்டுக்கு அவமானமல்லவா! இதைக் கண்ட உனது
பக்தனவன் சித்தம் துடிப்பதைப் பாரடா! அவன் இரத்தம்
கொதிப்பதைப் பாரடா! அவர் தம் பித்தம் தெளிய வைத்து
சித்தம் தெளிவிப்பாய் சிங்கார வேலனே!

மாரியில் நீரோடிப் பாய்ந்த தெருவெல்லாம் கோடையில்
காய்ந்து கிடந்தாலும் ஊரின்; அத்தெருவெல்லாம்
உன்னழகுத் தேரோடும் போது மக்கள் வெள்ளம்
அலையென வந்து மோதுமே! பாரோடு ஒன்றித்து
ஊரோடு கூடி சீரோடு வாழ்ந்திருந்தோமே! சீரழிந்த
நிலை மாற்றி ஊரினிந்த நிலை போக்கி வேருடன்
சீருடன் வாழ வைப்பாய்! வேலனே! எங்கள் சீலனே!

சுவிஸிலிருந்து புங்கையூர் மதி.

சனி, 17 டிசம்பர், 2011


திகழ்
22. Nov, 10:39


காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்
மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக்
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து Weitere Informationen …
திகழ்
7. Nov, 11:32


நஞ்சுண்டான் நாமம் பிறவிக்கு நஞ்சாகும்

அந்நஞ்சு நாவேற நெஞ்சுக்(கு) அமிழ்தாகும்
அஞ்செழுத் தோத உயிராம் எழுத்தழியும்
அஞ்சாளும் அஞ்சுகொல் நெஞ்சு ! Weitere Informationen …
திகழ்
30. Okt, 6:56


அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்! - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்!
முருகா என்றோதுவார் முன்! Weitere Informationen …
திகழ்
29. Okt, 8:13


ஒருகண் கனலாம் இருகண் சுடராம்
உறுகண் ஒருமூன்றும் போதாதென் றின்னும்
ஒருகண்ணை வேண்டியதேன்? வேடன்கண் அப்பர்
சிறுகண்ணைத் தோண்டியதேன் செப்பு. Weitere Informationen …
திகழ்
28. Okt, 14:57


பலன்கருதிச் செய்கர்மம் எப்பலத்தால் நிற்கும்?
பலன்கருதாக் கர்மம்தான் தற்பலத்தால் நிற்கும்!
பலனொன்றும் வேண்டாது பாப்பலவே செய்தேன்
பலனென்றன் சிற்றம் பலம்! Weitere Informationen …
திகழ்
26. Okt, 9:27



காளியே ! அன்பரைக் காத்திடும் ஈசனின்
தோளினைப் பங்கிட்ட தேவியே ! வாளித்
தவளையாய் வாழ்கிறேன்; நீயெனை ஞானக்
குவளையாய் மாற்றிட வா. Weitere Informationen …
திகழ்
16. Okt, 12:11



வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
 Weitere Informationen …
திகழ்
15. Okt, 11:01


சரணம் சரணமென்றே சண்முகனை நாளும்
சரணடைந்தால் உண்டாகும் சந்தோசம் - பாழும்
மரணம் மரணமெல்லாம் மாய்ந்தே மறைந்தே
மரணமில்லா(து) உண்டாகும் வாழ்வு. Weitere Informationen …
திகழ்
11. Okt, 14:51



அள்ளித் தருவதற்கு ஆயிரம் உண்டிங்கே
உள்ளிபோல் உன்னை உரித்துத் தரவேண்டாம்
துள்ளிக் குதிக்க , துடிக்கும் உயிர்க்கு
துளியேனும் நெத்தத்தைக் கொடு. Weitere Informationen …
திகழ்
9. Okt, 15:05



தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன்
வேளாள னென்பான் விருந்திருக்க - வுண்ணாதான்
கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர்
கேளாக வாழ்த லினிது. Weitere Informationen …
திகழ்
1. Okt, 17:10


பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்! Weitere Informationen …
திகழ்
24. Sep, 8:07


ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொழுதுங்
கொண்டக்கால் வாராது கூற்று. Weitere Informationen …
திகழ்
23. Sep, 16:47


பொய்களெல்லாம் நாணும் ; பிணந்தின்னும் பேய்கள்
பயந்தோடும் ; பெட்டிகள் பஞ்சுமெத்தை யாகும் ;
வரந்தரும் தெய்வங்கள் வேடமிட்டுக் கொள்ளும் ;
அரசியல் வாதியைக் கண்டு. Weitere Informationen …
திகழ்
21. Sep, 14:38



பனிபோல் உருகுகிறேன் பாராயோ கண்ணா !
இனியும் எனக்குநீ இன்பத்தைத் தாராயோ
கண்ணா ! சிதைக்கும் கவலைகளைத் தீராயோ
கண்ணா ! மணிவண்ணா ! நீ Weitere Informationen …
திகழ்
20. Sep, 14:28


அந்நியன் வந்தான்; அவனை விரட்டிடவே
இந்தியன் என்றோம்; இணைந்தே திரண்டிட்டோம்;
இன்னலைப் போக்கியே இன்பத்தைக் கண்டோம்;
இனியொன்றாய் வாழ்ந்திடு வோம். Weitere Informationen …
திகழ்
18. Sep, 14:32



தேன்பாகில் ஊறும் திராட்சை உதடுகளை
ஏன்தான் படைத்தாய் இறைவனே - நான்கண்டு
கவ்விச் சுவைக்கத்தான் காலமெல்லாம் பாடுபட்டுச்
செவ்விதழைத் தந்தாயோ செய்து! Weitere Informationen …
திகழ்
11. Sep, 10:40



அடக்குமுறை எங்கள் அணுகுமுறை என்றே
அடங்காமல் ஆடும் அரசாங்கந் தன்னை
அடக்குவார் நாட்டுமக்கள் தேர்தலின் மூலம்!
அடங்காமை வீழ்ச்சிக்கே வித்து. Weitere Informationen …
திகழ்
10. Sep, 13:08



தண்ணீரே இல்லாமல் தாமரைத்தான் வாழுமோ?
விண்மீனும் வானத்தை விட்டுத்தான் வாழுமோ?
எண்ணாமல் எப்படித்தான் நானும் இருப்பேனோ?
கண்ணா உனையெண்ணா மல். Weitere Informationen …
திகழ்
6. Sep, 14:40


நீயில்லை என்னும் நினைவே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நிகழ்வே எனக்குவேண்டாம்;
நீயில்லை என்னும் நொடியே எனக்குவேண்டாம்;
நீயே எனக்குவேண் டும். Weitere Informationen …
திகழ்
20. Aug, 11:10


முக்தி பெறுவதற்கும் ; முன்னேற்றம் காண்பதற்கும் ;
சக்தி பெறுவதற்கும் ; சாதனை செய்வதற்கும் ;
உக்தி வகுப்பதற்கும் ; உண்மை உணர்வதற்கும்
பக்தியே பாதை நமக்கு. Weitere Informationen …
திகழ்
9. Aug, 9:16



தாவிக் குதிக்கும் தவளை மனமே!நீ
பாவம் புரிந்தென்னை பாவியாக்கப் பார்க்காதே!
ஆவி துறக்கும்முன் ஆசை அடக்கியே
கோவில்கொள் ஆண்டவனை !
 Weitere Informationen …
திகழ்
24. Jul, 11:54


கதிராடும் நன்நிலத்தை; காற்றாடும் காட்டை
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிகெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியைச் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு. Weitere Informationen …
திகழ்
17. Jul, 6:27


மல்லரை வென்ற மணிவண்ணா! உந்தன்
மலரடி போதும் மணிவண்ணா! எந்தன்
கவலையைப் போக்கிடும் கார்வண்ணா! இன்பக்
கவிதையைக் கேள் கார்வண்ணா!

*************************************
முழுப்பாடலை வாசிக்க இங்கே செல்லவும்

***************************************
 Weitere Informationen …
திகழ்
9. Jul, 14:57


வண்டாய் மலர்தாவும் வண்டாய் மனமலையும்
செண்டாய் மதிமயங்கும் செண்டாய் மனம்மயங்கும்
நண்டாய் நிலம்கீறும் நண்டாய் மனம்சிதையும்
கண்டால் உனைக்கண்டால் நன்று. Weitere Informationen …
திகழ்
9. Jul, 9:59


நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. Weitere Informationen …