திங்கள், 11 மே, 2020

எங்கள் குலவிளக்கு எழில்ராணிபேத்தியவள்
திங்கள் ஒளிதேவியவள் தீவுமண்ணின் சேயுமவள்
தங்க மேனி தாரகையே தவழ்ந்தெழுந்து நில்தாயே
எங்கள் துயர் துடைத்திட ஏற்றம்பெற எழுந்திடுவாய்


விண்ணுதித்த முழுநிலவே வீரவம்சம் வாழ வந்தாயே
முன்னுதித்த முத்துப்பேத்தி முத்தமிழின் மூச்சு நீயே
தன்குலத்தை தழைக்கவென தரணிவந்த தமிழழகே
உன்குலத்தை உயர்த்திடவே உதயமதாய் உதித்திடுக


பெற்றவளும் பெரும்தந்தையும் பேருவகை மாமனவன்
உற்றவளாய் உன்முகம் உவக்கும் அம்மம்மா தானவளும்
சிற்றன்னைசித்தியவள் சிரிப்புக்காட்டும் தாத்தாவும்
உற்றம் உறவு புடைசூழ வந்து வாழ்த்தும் நேரமிது


ஆடி ஓடி அசைந்தாடும் அழகுமயில் கோலமவள்
நாடி வந்த எம்மை எல்லாம் சோகம் தீர்த்த செல்லவள்
கூடி நின்று உம்மை நாம் கொலுவிருத்தி கொற்றவையில்
ஆடிப்பாடி ஆசி கூறி ஆனந்தமாய வாழ்த்துகிறோம்


வாழி தாயே ! வாழி சேயே !! வாழி நீயே !!!
வாலி தாயே வாலி செய் வாலி நீயே

சனி, 18 ஜனவரி, 2020

என் தேன்மொழிக்காய்,,,,,,

ஒரு சொட்டு கண்ணீரும் இல்லாம
என் உசுர பறிச்சி போறியே நீ
நெஞ்செல்லாம் சிரிக்குது
உடம்பெல்லாம் உறையுது
...
வழியமரிச்சு வயச கேக்குற
விழிய விரிச்சு என்ன புடிக்குற
பட்டபகலிலும் என்ன கடத்துற
எங்க படிக்குற இந்த வித்தைய

கண்ணசிமிட்டி நீ என்னை ஒடக்கிற
தூர நிக்குறன் என்னை இழுக்குற
வாசல் வழியில காத்து நிக்குற
வந்து சேர்ந்ததும் ஒழிய ஓடுற..

திரும்ப திரும்ப நான் திரும்பி பாக்குறன்
கிட்ட வந்து நீ முத்தம் கொடுக்குற
ஒத்த வெரலுல சுண்டி இழுக்குறன்
மொத்த வலையிலும் மீனா மாட்டுற

கிராமத்து வாழ்க்கை

பழங்கஞ்சி பாலோட,
கொச்சிக்கா வெங்காயம்,
ரெண்டு ஊடு ஒத்துமயா,
திண்டு போட்டு கத பேசும்...

கூரைட இடுகல்ல,
குருவிக்கும் கூடிரிக்கும்,
சோத்துமணி நாலஞ்சி,
அதுகளுக்கும் வந்து உழும்...

வயித்துப் பொழப்புக்கு,
வெள்ளாம வெவசாயம்,
நெல்லு மூட்ட நாலஞ்சி,
ஊரெல்லாம் சுத்தி வரும்...

வெள்ளாம முடிஞ்சிட்டா,
வெளயாட ஆக்கள் வரும்,
வரண்ட பூமி மைதானம்,
கல கட்டி கூச்சல் போடும்...

நோயின்டா, நொடியின்டா,
ஓரு கூடி பாக்க வரும்,
மூலிக எல வெச்சி,
வைத்தியமும் செஞ்சி விடும்...

பெரச்சின ஏதுமுன்டா,
மரத்தடிய கூட்டம் வரும்,
பொலிசுக்குப் போகாம,
வெவகாரம் முடிஞ்சி விடும்...

மாடியில கோடியில,
இல்லாத சந்தோஷம்,
மாடு மேய்க்கும் வேலைல,
நெரஞ்சிருக்கும் பாக்க வாரும்..

கிராமத்து காவியம் -அத்தியாயம் -1

கிராமத்து காவியம் -அத்தியாயம் -1
ஒத்தையடி பாதையிலே
ஒத்தகால் செருப்போட
ஒத்தபனமர நிழலுல
ஒத்தையா நா இருந்தேன்



வந்தவழி மறந்தவளோ - இல்ல
போறவழி தெரியாதவளோ


தெரியவில்லை!

அஞ்சு அடுக்கு பத்தான் போட்ட சட்ட
அவ சட்டையில 2 புள்ளி 1 வருச கோலம்
முட்டுக்கு மேல தூக்கி கட்டிய பாவாட
வெள்ளாட்டு மார்பு போல அவ பாதம்
திருக்க வாலு போல கழுத்து
சின்ன மடிப்புகாரி
சிவந்த உடம்புக்காரி - அவா


தலையில சுள்ளி விறகு
வடக்கை அருவா இடக்கை செருப்பு
கண்ணெல்லாம் கண்ணீரு
கன்னி பொண்ணு அவே
கண்கலங்கி நின்னா
செம்மண் புழுதிக்குள்ள


ஏம்பாடே பெரும்பாடு
ஒம்பாடு என்னமா


வைகையாத்து நீர் போல
தெரண்டு வந்த கண்ணீர் துளி

மழலை வாய் திறந்து

ஏ !
ஊருக்காரிக ,
என்னைய உட்டுபுட்டு போய்டாளுங்க!
எனக்கு வந்த பாத
மறந்து போச்சி !

சூரியனும் செத்துருட்சி!
நிலவும் பூத்துரிச்சி !

ஒத்த புள்ளக்காரியா எங்க ஆத்தா
ஒத்தையில போகவும் எனக்கு ஒப்பல
ஒத்தாசைக்கு கூட வாயா ?

கூட வந்தா என்ன புள்ள தரவ .................!


மொதல்ல வாயா பாப்போம் ..................!

அட சொல்லு புள்ள ...............................!


என்னய்யா உனக்கு வேணும்...............!

அப்புடி கேளு !

கள்ளிபழ உதட்டு காரி
கன்னிபைய எனக்கு
கன்னம் செவக்க ஒரு முத்தம் வேணும் புள்ள
அவ்வளவுதா!


இவ்வளவு தானாக்கும்
நா கூட உன்னைய கட்டிக்க சொல்லுவேயோனு நெனச்சே யா !


ஏ கட்டிக்க மாட்டியா ...........!

எனக்கும் ஆசைதா


பின்ன என்ன புள்ள ?


ஆனா ஒரு சிக்கல் இருக்குயா!

என்னது புள்ள

ஓ பொண்டாட்டி ஒத்துக்கணுமே யா 

கிராமம்

கிராமம்
பரவும் பகலவனின் கதிர் !
பசுமைப் பயிர்களின் உயிர் !

நிலத்தை உழும் ஏர் !
நிலதேவியின் தேர் !

வானுயர வளர்ந்த மரங்கள் !
வானுலகம் செல்லும் வழிகள் !

ஆநிரைகளின் கூட்டம் !
ஆண்டவனின் தோட்டம் !

உணவளிக்கும் உழவர் !
உலகத்தின் முதல்வர் !

ஊருக்கு ஓர் ஊருணி !
நீர் தரும் பேரணி !

அழகிய ஊற்றாய் அருவி !
அழகு சேர்க்கும் கருவி !

படர்ந்த வயல்வெளி !
பசுமைப் புல்வெளி !

வீரம் கொண்ட மாந்தர் !
வீரர்களில் வேந்தர் !

மனம் வீசும் தோட்டம் !
மனங்கவர் பூக்கள் கூட்டம் !

மழை தரும் மேகம் !
மயில்களின் மோகம் !

குயில் பாடும் பாட்டு !
குழந்தைக்கு தாலாட்டு !

வாசலின் கோலங்கள் !
வர்மரின் ஓவியங்கள் !

ஊர்கோலத் திருவிழா !
ஊர்மக்களின் பெருவிழா !

ஒற்றுமையின் வலிமை !
வேற்றுமையில் ஒருமை !


எங்கு நோக்கிலும் இனிமையான காட்சி !
இங்கு நடப்பதோ இயற்கையின் ஆட்சி !
எங்கு தேடினாலும் கிடைக்காத ஆனந்தம் !
இங்கு வாழ்ந்திட செய்திட்டேன் புண்ணியம்

எங்க ஊருபோல வருமா

எங்க ஊருபோல வருமா
நெத்திக்கண் செவந்து நெருப்பைத் தந்தவன்
வடக்குத் தெசயில் அருள் பொழிய
சித்திரையில் வடம் புடித்துத் தேரிழுத்தால்
தெக்கே அம்மனும் உச்சி குளிர்ந்திடுவாள்...


சாலையில் பூக்களின் ஊர்வலம் போல
கூட்டம் கூட்டமாய் நடந்தே மழலைகள்
மேற்கில் பள்ளிக் கொடத்துக்குச் செல்வார்கள்
மாலை வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளுவார்கள்...


கெழக்கே மழைநீர் நெரம்பும் கொளத்தில்
அழகாய் அல்லியும் நின்னு சிரிக்கும்
கரையினைச் சுத்தி மரங்களும் அசைந்தாடும்
சிறுவரும் முங்கி நீச்சலும் அடிப்பார்கள்...


சேவல் கூவிட கண்ணத் தொறந்ததும்
வீசும் தென்றலில் ஒடம்பும் சிலிர்க்கும்
சாணம் தெளித்து மாக்கோலம் போட
வாசல் தெனமும் வண்ணமாய் இருக்கும்...


வெதச்ச நெல்லும் வெளஞ்சு நிக்கும்
மொளச்ச பூச்செடியும் மலர்ந்து சொக்கும்
ஆடும் மாடும் அஞ்சறிவு சொந்தம்
ஆசயில் பழகிட அன்பாக கொஞ்சும்...


வேதனை இருந்தாலும் வேர்வையில் நனைந்திட
ராத்திரி தூக்கம் ரணம் குறைக்கும்
தெருவில் குடிசைகள் தோரணமாய் அலங்கரிக்கும்
குடிசைக்குள் கோபுர நெஞ்சங்கள் வரவேற்கும்...

சொர்க்கம்

சொர்க்கம்
வந்துப் பாருமய்யா எங்க கிராமத்து அழக...


பொத்தல் குடுசக்குள்ள
பிரியாத உறவிருக்கும்...
கத்த நோட்டுக்குள்ள
காதலுந்தான் ஏதய்யா!

ஓடதண்ணி குடிச்சிருந்தா
அமுதத்த மறந்திருப்ப...
தெணங்கஞ்சி ருசிச்சிருந்தா
உஞ்சொத்தையே கொடுத்திருப்ப!

வெளஞ்ச நாத்துக்குள்ள
வெவசாயி உசுரிருக்கும்...
வெங்காயம் கடிச்சுக்க
பழையகஞ்சி காத்திருக்கும்!

ஏசிகாத்துக்கு நாங்க
ஏங்கி நின்னதில்ல...
பச்சையோல தென்னக்குள்ள
தென்றலும்வர மறந்ததில்ல!

பள்ளாங்குழிக்குள்ள
பொண்ணோட மனசிருக்கும்...
பச்சகுதுர தாண்டுறதுல
பசங்களோட பொழுதிருக்கும்!

கொழந்தைக்கு சோறூட்ட
வான்மகளும் காத்துநிப்பா...
இருட்டுக்கு தொணையாத்தான்
மின்மினியும் வந்துநிக்கும்!

இயற்கத் தந்த கொடக்குள்ள
எங்க கிராம அழகிருக்கு...
செயற்க செஞ்ச நகருக்குள்ள
நோவு மட்டும் மிஞ்சியிருக்கு!!
!

மண்மணக்கும் கிராமத்து வாழ்க்கை

ஆடிப் பாடி வளர்ந்த
ஆற்றங்கரை மணலும்,

கால் கொலுசை பறித்துக் கொண்ட
சேற்று வயல் நிலமும்,

துள்ளிக் குதித்து திரியும்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியும்,

பயமின்றி பாசத்துடன்
முட்டிப் பழகும் கன்றுக்குட்டியும்,

தாகம் தணிக்கும்
தென்னை மரமும்,

களைப்புற்ற வேளையிலே இளைப்பாற
நிழல் தரும் வேப்ப மரமும்,

கோடைக் காலத்தில்
ருசிக்கொண்டு ஈர்க்கும் புளியமரமும்,

கிளையெங்கிலும் கொத்து கொத்தாய்
பழங்கள் தரும் மாமரமும்,

சிறு பிள்ளைகளில் தாவி விளையாடிய
ஆலமர விழுதுகளும்,

அம்மரங்களில் கூடு கட்டி
கூட்டாய் வாழும் பறவைகளும்,

மண்வாசத்தோடு சேர்ந்து வீசும்
மல்லிகை மணமும்,

எங்களின் அன்பைப் போல்
என்றும் வற்றாத கிணறும்,

அக்கிணற்றிலே நீச்சல்
பயின்ற நினைவுகளும்,

ஆசை கொஞ்சும் மாளிகையாய்
அழகிய ஓட்டு வீடும்,

அதிகாலை சூரியனை வரவேற்கும்
வாசற் கோலங்களும்,

கண்ணுக்கு விருந்தளிக்கும்
மங்கையின் பாவாடை தாவணியும்,

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்
வெள்ளாமை காடுகளும்,

திரும்பிய திசையெல்லாம்
பசுமை கொஞ்சும் இயற்கையும்,

பாடுபட்டு சிந்தும் என் தந்தையின்
வியர்வைத் துளிகளும்,

இவ்வுலகம் உண்ண காரணமாய்
விளங்கும் விவசாயிகளும்,

எங்கள் மண்மணக்கும்
கிராமத்து வாழ்க்கையில் மட்டுமே..!
இதைவிட சொர்க்கமென்று ஏதாவதுண்டோ..