செவ்வாய், 27 நவம்பர், 2012

பொங்கிடும் கடற்கரை ஒரத்தி லே 
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே 
மங்களம் தங்கிடும் நேரத்திலே 
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே 

பாசத்தில் எங்களின் தாயானான் 
கவி பாடிடும் மாபெரும் பேரானான் 
தேசத்தில் எங்கணும் நிலையானான் 
விலை தேடியே வந்திடும் தலையானான் 

இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான் 
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான் 
தன்னின மானத்தை தான் மதித்தான் 
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் 

இங்கொரு தாயகம் மூச்சென்றான் 
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான் 
வந்திடும் படைகளை வீச்சென்றான் 
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் 

விடுதலைபுலிகளின் பலமானான் 
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான் 
படுகளம் மீதிலோர் புலியானான் 
பிரபாகரன் எங்களின் உயிரானான் 

என்றுமே எங்களி ன் தளபதியே 
நீ எங்களின் வானத்து வளர்மதியே 
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக