செவ்வாய், 22 நவம்பர், 2011




மாவீரரே!
சுவாசம் தழுவும் உங்கள் முச்சு கலந்த காற்றாயும் கால்கள் நனைக்கும் கடலின்
 அலை கரங்களாயும் எங்கள் உயிர் நாடியில் கலந்தவரே !
மூடிவிழா நீள் நினைவுகளால் கனக்கும் இதயங்களுடன் உங்கள் முன் விளக்கேற்றி சிரம் தாழ்த்தி தலை வணங்குகின்றோம் .

உங்கள் கனவுகளை தோழ்களில் சுமந்து நெருப்பாற்றில் பயணிக்கும் கணங்களிலெல்லாம் எம் நெஞ்சங்களில் வலிமை சேருங்கள். பகல் தொலைந்த இருள் கூரையின் கீழ் துயில் கலைந்த மக்களின் துயரங்களால் எம் நிலம் தகிப்பது இனியும் தொடராதிருக்க புயல் கடந்த வாடையிரவின் விடி வெள்ளியாய் எம் கண்களில் வெளிச்சம் காட்டுங்கள் .

உம் முன் தாழ்ந்த தலைகள் நிமிரட்டும் துவண்ட கரங்களின் பிடிகள் இறுகட்டும் இருண்ட கண்கள் ஒளிரட்டும் சோர்ந்த கால்கள் வேகம் கொண்டு விரையட்டும் எம் முன் வாருங்கள் எம் மனங்களில் சுடர் ஏற்றுங்கள் எம் காவல் தெய்வங்களே...

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

அருள் மொழி இசைவழுதி

உணர்வலைகள் பின்னல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக