திங்கள், 1 நவம்பர், 2010

சுதந்திரம் நோக்கிப் பயணித்து
சூனியத்தை அடைந்த
சூட்சுமத்தில் தான் இன்னும் எமது
வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது

முகங்கள் தொலைந்த உருவங்களில்
என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள்
அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள்
வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி
அண்ணாந்து ஊதியபோதும்
முகத்தை உணரமுடியவில்லை

நாம் தொலைந்து போனோம்
எம்முடன் எடுத்துவந்த
சாப மூட்டைகளில் தலையை சாய்த்து
புலம்பிக்கொண்டிருக்கின்றோம்

சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து
ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம்
சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று
அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது

விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும்
பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது
இருந்தும்
நடைபிணங்களின் வாய்கள்
ஓயாது அரசியல் பேசுகின்றது

தெருப்போக்கனாய் நாடோடியாய்
அகதியாய் அடிமையாய் சுயம் மாறியபோதும்
எம்மோடு வாழும் சாபங்களை
வாழவைத்துக்கொண்டிருக்கின்றோம்

தெற்கில் இருந்து வந்த டாங்கிகளும்
வடக்கில் இருந்து வந்த தேர்களும்
பலப்பரீட்சை நடத்தியதில்
வன்னி உருக்குலைந்து போனது
வடம் பிடித்த மக்கள் முடமாகிப்போனார்கள்

ஊனமுற்ற உடல்கள்
போரின் வேதனையை பற்றி பேசுகின்றது
ஊனமுற்ற மனங்கள்
போரின் தோல்வியைப் பற்றி பேசுகின்றது

புதிய தேர்கள் தயாரக இருக்கின்றது
சோடினைகள் பலமாக இருக்கின்றது
வடம்பிடிக்கும் மக்கள் முடமாகிவிட்டார்கள்
ஆனாலும் தேரிலிருந்து இறங்க முடியாது
முடமானவர்களை தூக்கிவிடவும் ஏலாது
வெள்ளை வீதிகளில் வெள்ளோட்டம் விடவே
நேரம் போதாமல் இருக்கின்றது.

சத்தியமும் தர்மமும்
சாவுகளை உயிர்ப்பிப்பதில்லை
சிந்திய கண்ணீரை மீண்டும்
உணர்வுகளுக்குள் சேர்ப்பதில்லை
இருந்தும்
எம்மிடமே இல்லாத இரண்டும்
எமக்கு துணை இருக்கும் என்று நம்புகின்றோம்

தேரில் இருக்கும் வரை உங்களுக்கு
கண்ணீர் தீர்த்மாக தெரியும்
பசி விரதமாக தெரியும்
குருதி குங்குமமாகத் தெரியும்
அழத்தென்பில்லாத உணர்வுகள்
பக்தியாகத் தெரியும்

தேசிய வரத்தை தவிர
உங்களால்
எதையும் அவர்களுக்காக
வழங்கமுடியாது

நீங்கள் தரும் வரமாகவே
அவர்கள் இருக்கின்றார்கள் என்பதை
உங்களால்
எக்காலத்திலும் உ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக