வெள்ளி, 15 அக்டோபர், 2010

பெண்புலி போராளிகள்....

கவிஞர்:அபிசேகா
பிரசுரித்த திகதி:25, MARCH 2010
Views 11122
உறவுகளை...
அணைக்கும் கரங்கள்.
ஆயுதங்களை...
அணைக்கத் துடிக்கின்றது
நம் தேச விடுதலைக்காய்.

ஒன்றா.... இரண்டா....
ஓராயிரம் கரங்கள்.
ஒருவனின் பாதைவகுப்பில்
கட்டெறும்பாய் தொடர்கின்றது
ஈழ மண்ணை மீட்பதற்காய்.

மங்கை தான் இவள்
கங்கை போல் இவள் செயல்.
விழி தூங்கிப்பார்த்ததில்லை - இவள்
வீர மரணத்தின் போது...
வீரத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கவில்லை.

கல்லறை தான்... எம்
ஈழமண்ணின் கருவறை.
பாரதி தேடிய புதுமைப்பெண்
இவள் தானா....?
இது நிஜம் தானா.....?

பயம் என்ற வார்த்தை
வீரத்திற்குள் புதைந்துவிட்டது.
மண்மீது வைத்த காதலால்...
தாகம் என்ற வேகம்
களம் கண்டு வென்றுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக