இந்த இணையத்தில் இருந்து காணொளிகள் ,படங்கள்,ஆக்கங்கள் ,கட்டுரைககளை பிரதி பண்ணுதல் தடை செய்யப்படுள்ளது. எமது அனுமதியின்றி பிரதி பண்ணியபின் எமது இணையத்துக்கு நன்றி என போடுதலும் கூடாது .தயவு செய்து இந்த விதி முறையை மீறி சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.நன்றி.
புதன், 7 மே, 2014
வெள்ளி, 25 ஏப்ரல், 2014
மரபுக் கவிதை
2.1 மரபுக் கவிதை |
வியாழன், 17 ஏப்ரல், 2014
காத்திருந்த கண்ணுக்குள்
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம் பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம் பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.
பருவக் களமாடும்
பவழவல்லிக் கொடியே; உனக்குப்
பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?
புகல் தந்த உன் இதயத்தால்
என் புலன்களை ஆளும்
உலகத்துப் புதிய அதிசயம் நீ;
சூரியனைத் தூங்கவைத்த
பூமிமங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன்விசாரணைகள்.
நீ புனலாடும் போதெல்லாம்
வெட்கத்தின் நிறம் போக்கி
கங்கை சிவக்கிறது
வள நதியில் இள வயதில்
களவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவன் நான்.
அனிச்சத்தின் சிரிப்பிற்கு
அர்த்தஙகள் நான் தேடிக்
கணனித் திரையில் காத்திருக்கிறேன்!
உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆனபின்னும்
எனக்கு ஏன் ஆயுள்தண்டனை.
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்-
வள்ளலாக நீ இருந்தும்
வதை செய்யும் தேவதையே! - உன்
மடியில் நான் உறங்க
ஒரு வினாடி போதுமடி.
பவழவல்லிக் கொடியே; உனக்குப்
பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?
புகல் தந்த உன் இதயத்தால்
என் புலன்களை ஆளும்
உலகத்துப் புதிய அதிசயம் நீ;
சூரியனைத் தூங்கவைத்த
பூமிமங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன்விசாரணைகள்.
நீ புனலாடும் போதெல்லாம்
கங்கை சிவக்கிறது
வள நதியில் இள வயதில்
களவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவன் நான்.
அனிச்சத்தின் சிரிப்பிற்கு
அர்த்தஙகள் நான் தேடிக்
கணனித் திரையில் காத்திருக்கிறேன்!
உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆனபின்னும்
எனக்கு ஏன் ஆயுள்தண்டனை.
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்-
வள்ளலாக நீ இருந்தும்
வதை செய்யும் தேவதையே! - உன்
மடியில் நான் உறங்க
ஒரு வினாடி போதுமடி.
உச்சி வெயிலை
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;
நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும் நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;
நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும் நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.
சிறு மணல் வீடுகளை
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.
இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.
மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.
வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.
பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.
இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.
மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.
வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.
பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.
தரைநோக்கி வானம்
தவழ்ந்து வந்துவிட்டால்
பகலவன் பதிவில்வந்து
தாமரைக்கு இதழ்முத்தம்
தானாகக் கிடைத்துவிடும்.
ஒளிகசியும் கண்ணுக்குள்
உயிர்கசியும் மனத்தோடு
பருவத்தைக் களமாக்கிப
போராடும் புதுவசந்தும்.
பசலைக்கு வசப்பட்டுப்
படலைக்குள் காத்திருந்தாள்.
பூத்திருக்கும் மலர்களிலே
தேன் குடிக்கும் வண்டினங்கள்
கூத்தாடிக் களிப்பதனைப்
பார்த்திருந்து கண்வியர்த்துத்
தோழியிடம் தூதுசொல்லி
மான்குட்டித் துள்ளல்கொண்டு
இந்திரச் சுவைகள்காண
மந்திரத்தில் மறைந்தாள் பாவை.
இமயத்தைத் தூக்குபவன்
இளந்தாரிக் கற்கள் எல்லாம்
இருவிரலால் நகர்த்திக் காட்டும்
இரும்பனைய தோளுடையோன்
வரம்புகளை மீறுகின்ற
வாலிபத்தின் மிடுக்கோடு
முல்லைக்குத் தேராக
கிள்ளைக்குத் தோளானான்.
காற்றுப் புரவிக்குக்
கடிவாளம் அவளாகிப்
பள்ளிக்கு இடந்தேடி
கள்ளி வளர் காடுவரை
இருள்சூழும் வேளைக்குள
கரைமீது நடந்து சென்றான்
அங்குசக் கூர்கொண்டு
முதுகில் அறைகின்ற
அடித்துக் கனியும் பழமாக
நசிந்து கனிகிறது தனம்.
நால்வகைக் குணத்தாளில்
ஐந்துநில அழகுபார்த்து
ஆறுசுவை உணவையுண்டு
எழுபிறப்பின் பலனையெல்லாம்
எட்டுகின்ற இன்பச் சேற்றில்
நவரசம் கண்டார் இங்கே.
தூரத்தில் தோழி ஆங்கே
வெட்கத்தில் சிவந்து நின்றாள்.
தவழ்ந்து வந்துவிட்டால்
பகலவன் பதிவில்வந்து
தாமரைக்கு இதழ்முத்தம்
தானாகக் கிடைத்துவிடும்.
ஒளிகசியும் கண்ணுக்குள்
உயிர்கசியும் மனத்தோடு
பருவத்தைக் களமாக்கிப
போராடும் புதுவசந்தும்.
பசலைக்கு வசப்பட்டுப்
படலைக்குள் காத்திருந்தாள்.
பூத்திருக்கும் மலர்களிலே
தேன் குடிக்கும் வண்டினங்கள்
கூத்தாடிக் களிப்பதனைப்
பார்த்திருந்து கண்வியர்த்துத்
தோழியிடம் தூதுசொல்லி
மான்குட்டித் துள்ளல்கொண்டு
இந்திரச் சுவைகள்காண
மந்திரத்தில் மறைந்தாள் பாவை.
இமயத்தைத் தூக்குபவன்
இளந்தாரிக் கற்கள் எல்லாம்
இருவிரலால் நகர்த்திக் காட்டும்
இரும்பனைய தோளுடையோன்
வரம்புகளை மீறுகின்ற
வாலிபத்தின் மிடுக்கோடு
முல்லைக்குத் தேராக
கிள்ளைக்குத் தோளானான்.
காற்றுப் புரவிக்குக்
கடிவாளம் அவளாகிப்
பள்ளிக்கு இடந்தேடி
கள்ளி வளர் காடுவரை
இருள்சூழும் வேளைக்குள
கரைமீது நடந்து சென்றான்
அங்குசக் கூர்கொண்டு
முதுகில் அறைகின்ற
அடித்துக் கனியும் பழமாக
நசிந்து கனிகிறது தனம்.
நால்வகைக் குணத்தாளில்
ஐந்துநில அழகுபார்த்து
ஆறுசுவை உணவையுண்டு
எழுபிறப்பின் பலனையெல்லாம்
எட்டுகின்ற இன்பச் சேற்றில்
நவரசம் கண்டார் இங்கே.
தூரத்தில் தோழி ஆங்கே
வெட்கத்தில் சிவந்து நின்றாள்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)