திங்கள், 10 பிப்ரவரி, 2014

பைந்தமிழிசை வல்லோன் பொன்.சுந்தரலிங்கம் (சுவிஸ் மதி )

ஐங்கரனே! ஆனைமுகத்தோனே! எங்கள் ஐயன் பொன் சுந்தரலிங்கனை 
அங்கையுள்வைத்துக் காத்தருளி
 மங்காப் புகழோடு பைந்தமிழிசை வல்லோனாய் வையமெல்லாம் வலம் வரவே காப்பாய்!
புங்கையூரின் கீழ்த்திசையில் தோன்றிய ஐந்தமிழின் இசை விளக்கம்!

ஏழிசைக் கடலில் இசை நுணுக்கம் அறியாது தத்தளிப்பவருக்கு நீ கலங்கரை விளக்கம்!
பாடிப்பாடிப் பயிற்சிப் பட்டறையால் வந்தது. செந்தமிழிசை நாப்பழக்கம்
பண்டிதர்க்கு மட்டுமல்ல பாமரர்க்கும் புரியப் பாடுவதே உன் வழக்கம்!
விசையொடிந்த உள்ளங்கட்கு இசையால் ஒத்தடம் கொடுக்கும் இசை மருத்துவன் நீ!
உன்னினமும் உன் சனமும் உள்ளவரை உன் பண்ணிசை முழங்கும.; கண்ணசையும்
காலசையும் உன் பண்ணமுதக் குரலோசை காற்றெடுத்துச் சென்று எண் திசையும் தான்; கலக்கும்
அதைக் கேட்டு விண்ணுலகம் கீழிறங்கும்!
பருந்தும் அதன் நிழலும் விலகாமல்
இருப்பதைப் போல், ஏற்றத்தாழ்வுகளுடன்
இசை நுணுக்கம் படப்பாடுதலில் வல்லவன் நீ! செவிக்கு விருந்தாகும் நோய்க்கு மருந்தாகும்!
ஐந்தறிவு ஜீவன்களும் உன்னிசையில் மயங்கும்
மரம், செடி, கொடிகள் யாவும் செவியினைப் பெற்றவை போல் களிப்புடன் இயங்கும்!
நீயோ! உலகெங்கும் பாடிப் பறக்கும் தமிழிசைப் பறவை! நாமோ உன் சங்கீத சாகர மழை அருந்தும் சக்கரவாகப் பறவை!
உன் நுண்மாண் நுழை புலத்தில் இசைப்பாடம் பயின்ற இளைய பறவைகள் புலமெங்கும்
பாடித் திரிவதால் நின் புகழ் சிறக்கும்! தாய் போலிருந்து விடுதலை வீரத்தைச் சீராட்டி வளர்த்தவன் நீ!
தாயுமாகித் தமிழுமாகித் தமிழிசையுமாகித் தமிழ்த் தேசமுமாகி, வானம் உள்ளவரை
வையம் உள்ளவரை தானமும் தளையும் இருப்பது போல், உன் தமிழிசைக் கானமும் தழைத்தோங்கி அழியாப் புகழேந்தி உன் கிளைகளோடு வாழ்க நீடு வாழ்கவே!
மனமுவந்த வாழ்த்தினை வழங்கும்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி

               முப்பொழுதும் தாய் நினைப்போடு...சுவிஸ் மதி



"ப" வடிவில் அமைந்து வாவென்று எல்லோரையும்
வரவேற்று உபசரித்து, மருந்தாயினும் விருந்தோடு
உண்ணும் பெருங் குணம் கொண்ட புங்குடுதீவுத்
தாயவளை வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!

புதன், 20 நவம்பர், 2013

மறந்து போகுமோ

தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
Picture 004
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி!
கூழுக்குள் நீந்தியது காணும்! 

கரையேருங்கள்!
எனக்கு புரையேறுகிறது!
கவிதைக்கு அவ்வப்போது
கரவோசையும் வேணும்!.
அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன்
வணக்கம்.

திங்கள், 18 நவம்பர், 2013

இனியேனும் ஒன்றிணைவீர்?

இனியேனும் ஒன்றிணைவீர்?

கதைபேசி, இலக்கியங்கள் சலிக்கப் பேசிக்
கற்பனையாம் பொய், புளுகில், கலைகள் தம்மில்
புதைபட்டீர்; காலமெல்லாம் போக்கி விட்டீர்!
புரைபட்டீர்; சிறைப்பட்டீர்; பார்ப்பான் காலில்
உதைபட்டீர்; வதைப்பட்டீர்; அடிமைப் பட்டீர்!
ஓடோடித் துயர்ப்பட்டீர்! உருப்பட் டீரா?
சிதைபட்டீர், தமிழர்களே! இனிமே லேனும்
சேர்ந்திணைந்து செயல்பட்டே இனங்காப் பீரே!

மண்சுமந்தீர்; கல்சுமந்தீர்; வானை முட்டும்
மாளிகைகள், கோபுரங்கள், கட்டி வைத்தீர்!
விண்சுமந்த முகில்தடவும் காட்டை யெல்லாம்
வெட்டி நல்ல நகராக்கி, வெளிநா டேகிக்
கண்சுமந்த நீர்சுமந்து, கையற் றேங்கிக்
கால் நடையாய்த் துயர்சுமந்து, நெஞ்ச மெல்லாம்
புண் சுமந்தீர் தமிழர்களே! உருப்பட் டீரா?
பொறைசுமந்தே இனியேனும் இனங்காப் பீரே!


புகழ்படைத்த வரலாற்றைப் பொய்யாய்த் தள்ளிப்
புளுகுக்குப் ‘புராணங்கள்’ எனும்பே ரிட்டுத்
திகழ்கின்ற பெருமையுடன் அவற்றை யெல்லாம்
தெருத்தெருவாய்ப் போய்ச்சொல்லி, பெருமை யோடு
நிகழ்கின்ற விழாக்களிலே ஆரி யத்தை
நிலைநிறுத்தி, அதற்குக்கீழ் நீங்கள் நின்றே
இகழ்தேடும் தமிழர்களே! உருப்பட் டீரே?
இனியேனும் ஒன்றிணைந்தே இனங்காப் பீரே!

கட்டிவைத்தே கோயிலுக்குள் – கருவ றைக்குள்
கல்லைவைத்துக் கடவுளெனும் பெரும்பேர் சொல்லி
எட்டிநின்று கும்பிடென்பான்; இளித்த வாயோ
டிலைவிரித்துப் படைத்திட்டு, விழுந்து, முன்னால்
முட்டிதேய் கின்றவரை கும்பிட் டீர்கள்!
மூடர்களே, தமிழர்களே! உருப்பட் டீரா?
அட்டியிலை அவனுயர்ந்தான்! இனிமே லேனேம்
அனைவீரும் ஒருங்கிணைந்தே இனங்காப் பீரே!

உடன்பிற்ப்பை மேல்கீழென் றொதுக்கி விட்டீர்!
ஒண்டவந்த ஆரியனைத் தேவன் என்றீர்!
கடன்பெற்ற வடமொழிக்குக் காவல் செய்தீர்!
மடன்பெற்ற மூங்கையவன் குருட்டுப் பெண்ணை
மணங்கொண்டு முடமொன்றைப் பெற்ற வாறாய்,
இடமின்றி உரிமையின்றி அடிமைப் பட்டீர்!
இனியேனும் மனம் ஒன்றி இனங்காப் பீரே!
இனியேனும் ஒன்றிணைவீர்?

- -பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1973

வியாழன், 14 நவம்பர், 2013

எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல  கவி வீச்சு ,கரு ப்பொருள்,  கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன் 

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!

ஆக்கம்: அ.பகீரதன்




இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?

படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?

அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?

முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?

பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா

அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே

முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

நன்றி.
அ.பகீரதன்


வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலே
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனால்
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோ
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேரும்
   பலமோடு வழி காணீரேல்
 திசைமாறுமா? 1 பகுதி
(ஒரு வீர தேசத்தின் கதை)
1.  நெய்தல் நிலம் .
நீரெழுந்து முன்னலைந்து  நிலவொளியில் மின்ன
நெய்தல்நில மங்கையர்தம் நீள்விழிக்கு ஒப்ப
கூரெழுந்த மீன்கள்தம்மைக் கொண்டுவந்த குமரர்
கொட்டியபின் கொள்ளுணவை கோலமகள் ஆக்க
தேரெழுந்த தெய்வவளம் திலங்கு மதிமாதர்
தெரியுமசை விழிகளினால் தேடிவலைவீசி
நேரெழுந்த மார்பினரை நிச்சயமாய்கொண்ட
நினைவதனில் ஆழ்ந்துகயல் நீர்மகளின் கண்போல்