புதன், 2 நவம்பர், 2016

முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை
திசைமாறி நடந்திருந்தால்
புனித அரியணையில்
தமிழ்த்தாய் வீற்றிருப்பாள்

மானிட ஒழுக்கத்தின்
அச்சுப் பிழைகளான
மகாவம்ச சீடர்களோடு
பக்கதேசப் படைக்கலன்கள்
இணையாதிருந்தால்
புலிகள் ராஜாங்கம்
மனிதனோடு கைகோர்த்து
இணைந்து வந்திருக்கும்

ஆனால் இங்கு
கல்லறைகளே
கல்லறைகளாகிவிட்டதால்
சடலங்களை விழுங்கும்
விலங்குகளால்
கல்லறைப் பிணங்களும்
மதம் எனும் பூதத்தால்
விழுங்கப்பட்டது அனாச்சாரம்

தொல்குடி மக்களின்
செதுக்கப்பட்ட நாகரிகத்தின்
சின்னங்கள் தூபிகள் சிலைகள்
ஆலயங்கள் கல்லறைகள்
வழிபடத் தெரியாத வழிபாடு
சிங்களக் கீழ்னிலை கண்டு

அஞ்சுமா புலிப்படை அடங்குமா சினம்
புதியபுதிய அலைகள்வந்து புரளும்
புதிய புறனாநூற்றை படைக்கும்
தமிழீத்தை புலியாட்சி செய்யும்
பூமிபிளந்து விதைகள் விழுந்து

விழவிழ எழுந்து வீரம்காப்போம்
சடலமானவர் மயானம் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
செத்தவர் சமாதிகள் அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்
காலமானவர் சவக்காலை அல்ல
மாவீரர் துயிலும் இல்லம்

சாவுவீடு பாடும் ஒப்பாரியும் அல்ல
போர்குணம் நின்று எழும் ஆணை
புனிதர்கள் எழுந்தருளும் ஆலயம்
கவிதையில் கதையில் கல்லில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக