செவ்வாய், 22 ஜனவரி, 2013


கவிதை துளிகள் -ஆக்கம் சசி நவரத்தினம் புங்குடுதீவு 4./லண்டன் 
____________________________________________________________________
தினமும் கனவிற்காக 
கண்மூடிய நான் 
இப்போதெல்லாம் நாட்களை 
நகர்த்துவதற்காக
கண்மூடுகிறேன்
கானல் நீராய் கண்ணீர்க்குவளையாய்
கனவுகள் நிறைந்த வாழ்க்கை
துடுப்பிருந்தும் கரை ஒதுங்க முடியா
துர்ப்பாக்கிய  நிலை உறவுகளை பிரிந்து வாழ்வது
----------------------------------------------------------------

அன்று ராமனை பிரிந்த சீதை
அசோகவனத்தில்
உன்னை பிரிந்து நான்
இன்று அதே
சோகவனத்தில்....
........................................................................¨
உன்னிடம் மனம்
தொலைத்த கணம் முதல்
காதல் அழகாய் தெரிந்தது....

உன் வரவு பார்த்து
விழிகள் பூத்து
கண்ணீர் காய்ந்த
வேளைகள் கூட
அழகானதாய் .....

இள மனதின் ஏக்கங்கள்
புரியாமலேயே உன்
விழிகள் என்னைச் சுற்றி
வந்த வேளைகள் கூட
அழகாய் ......

உனக்கு என் காதலில்
வலியை புரிய வைக்க
எத்தனித்த வேளைகள்
வலி கூட்டினாலும்...
...
உன்னை விரும்பியதாலே...
உனக்காய் என்று
உருக்கிய நிமிடங்கள்
எல்லாம்
என் வாழ்வில்
மிக மிக அழகாக
மெருகேறியது உன்னை
மனம் விரும்பியதால்...
இன்று களையிழந்து
நின்றாலும்...
இந்த இதயம் எனக்கு மட்டும்,
இன்னும் அழகாய்
தென்படுகிறது
நீ அதில் இன்னும் வாழ்வதால்.....

search on www.nilaamuttam.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக