வெள்ளி, 8 மார்ச், 2013

பெண் எனும் பெருஞ்செல்வம்

சத்திரத்தில் சாமியார்
சமையலறையில் மாமியார்
உலகில் உன்னைவிட பாவியார்
உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்

வேலையிலே எஜமான்
மாலையிலே உன்மான்(Man)
இப்படியே நீஏனம்மா அலைவான்
சபித்துவிடு இருவரும் தொலைவான்

இலக்கியத்தில் மட்டும்உனை பூவாய்
இல்லத்தில் எப்போதும்நீ நாராய்
மொத்தத்தில் நீபாலைவன தேராய்
எழுந்துவாம்மா ஆணுக்கு நிகராய்

நாட்டின் பெருஞ்செல்வம் நீயம்மா
நாவிழந்து நிற்பதுஉனக்கு தகுமா
நமக்கெல்லாம் நீதானே தாயம்மா
கூனிக்குறுகுவது நீஏனம்மா

விண்வெளியில் கால்பதித்தாய்
வீரமண்ணில் களம்பதித்தாய்
இன்னுமென்ன உறக்கமம்மா
கற்றுயர்ந்து ஆணையிடு ஆணையும் மிஞ்சிவிடு

நன்றி,
அ.பகீரதன்
http://pageerathan.blogspot.ca/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக