செவ்வாய், 22 நவம்பர், 2011




மாவீரரே!
சுவாசம் தழுவும் உங்கள் முச்சு கலந்த காற்றாயும் கால்கள் நனைக்கும் கடலின்
 அலை கரங்களாயும் எங்கள் உயிர் நாடியில் கலந்தவரே !
மூடிவிழா நீள் நினைவுகளால் கனக்கும் இதயங்களுடன் உங்கள் முன் விளக்கேற்றி சிரம் தாழ்த்தி தலை வணங்குகின்றோம் .

உங்கள் கனவுகளை தோழ்களில் சுமந்து நெருப்பாற்றில் பயணிக்கும் கணங்களிலெல்லாம் எம் நெஞ்சங்களில் வலிமை சேருங்கள். பகல் தொலைந்த இருள் கூரையின் கீழ் துயில் கலைந்த மக்களின் துயரங்களால் எம் நிலம் தகிப்பது இனியும் தொடராதிருக்க புயல் கடந்த வாடையிரவின் விடி வெள்ளியாய் எம் கண்களில் வெளிச்சம் காட்டுங்கள் .

உம் முன் தாழ்ந்த தலைகள் நிமிரட்டும் துவண்ட கரங்களின் பிடிகள் இறுகட்டும் இருண்ட கண்கள் ஒளிரட்டும் சோர்ந்த கால்கள் வேகம் கொண்டு விரையட்டும் எம் முன் வாருங்கள் எம் மனங்களில் சுடர் ஏற்றுங்கள் எம் காவல் தெய்வங்களே...

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

அருள் மொழி இசைவழுதி

உணர்வலைகள் பின்னல்கள்

ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</
<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</
<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறுகிறார்கள் :( :( :(

ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே<
<கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்</<நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்</
<அதிர ஊண்டிநடப்பவரே எம் வீரர்களின்களின் கனந்த சயனம் கலையக்கூடும்</
<பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கல்...களைப்பாறுகிறார்கள் :( :( :(

கார்த்திகை மாதத்து காற்றும் வந்து

கார்த்திகை மாதத்து
காற்றும் வந்து
காதோரம் கவி
சொல்லும்-ஈழம்
மீட்பது உறுதியென்று


மாவீரர் சிந்திய
உதிரத்தில் முளைத்த
மரங்களும் சொல்லும்
சிந்திய குருதிக்கு
சீக்கிரம் பதில்லுண்டென


ஒன்றாக இருந்து
ஒருதட்டில் உண்ட
இரண்டகர் சிலர்
தமிழீழம் கனவாம்
தலைவனும் இல்லையாம்
பேடிப் பயல்களின்
பிசத்தல் தான் இது.!

உணர்வுள்ள தமிழன்
உலகில் உள்ளவரை
புலி கொண்ட கொள்கை
மாறாது கோடியாண்டு
ஆனாலும் ...!!!
-பா .சங்கிலியன் -